பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
457

New Page 1

வரைவு முடுக்கம்

    கொல்கரி சீயங் குறுகா
        வகைபிடி தானிடைச்செல்
    கல்லத ரென்வந்த வாறென்
        பவர்ப்பெறிற் கார்மயிலே.

264

17.16 பொலிவழிவுரைத்து வரைவுகடாதல்

   
பொலிவழிவுரைத்து வரைவுகடாதல் என்பது தலைமகள் தன்னை யெதிர்ப்படலுற்று வருந்தாநின்றமை சிறைப்புறமாகக் கேட்ட தலைமகன் குறியிடைவந்து நிற்ப, தோழி யெதிர்ப்பட்டு, என்னையரது காவலை நீவி நின்வயத்தளாய் நின்று பொலிவழிந்து வருந்தா நின்றவளை நீ வரைந்துகொள்ளாது இவ்வாறிகழ்ந்து மதித்தற்குக் காரணமென்னோவெனத் தலைமகளது பொலிவழிவு கூறி வரைவு கடாவாநிற்றல். அதற்குச் செய்யுள்-

265. வாரிக் களிற்றின் மருப்புகு
        முத்தம் வரைமகளிர்
    வேரிக் களிக்கும் விழுமலை
        நாட விரிதிரையின்

_______________________________________________________________

அரிதன்று மன்-அவரிருந்த வழிச்சேறலரிதன்று; சென்றேமாயினும் அவ்வாறு சொல்லுவாரில்லை எ-று.

    செல்வரிதென்பது செல்வுழிக்க ணென்பதுபோல மெய்யீற்றுடம் படுமெய். செல்லவென்பது கடைக்குறைந்து நின்றதெனினுமமையும். மன்: ஒழியிசைக்கண் வந்தது. கல்லதர் - கற்கண்ணதர். கல்லதரினென்பது பாடமாயின், வந்தவாறென்னென ஒருசொல் வருவித்துரைக்க. பணிமொழி மொழிந்தென்பதனை மொழியவெனத் திரித்து, சிறைப்புறக்கிளவி யாயிற்றெனவொருசொல் வருவித்துரைக்க. சிறைப் புறக் கிளவி யாயிற்றெனவே, சிறைப்புற மாதல் குறித்தாளல்லளென்பது பெற்றாம். இவையிரண்டற்கும் மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த விளிவரல். பயன்: அது.

264

17.16.  வரைவு விரும்பு மன்னுயிர்ப் பாங்கி
      விரைதரு குழலி மெலிவு ரைத்தது.


   
இதன் பொருள்: களிற்றின் மருப்பு உகு முத்தம் - களிற்றின் மருப்புக்களினின்று முக்க முத்துக்களை; வரை மகளிர் வேரிக்கு வாரி