பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
462

வரை பொருட் பிரிதல்

    படுத்தநன் நீள்கழ லீசர்நிற்
        றம்பலந் தாம்பணியார்க்
    கடுத்தன தாம்வரிற் பொல்லா
        திரவின்நின் னாரருளே.

267

18.3 வரைபொருட்பிரிவை யுரையெனக் கூறல்

   
வரைபொருட்பிரிவை யுரையெனக் கூறல் என்பது மேல்வருமது கூறி வரைவுடம்படுத்தின தோழிக்கு, யான் போய் நுமர் கூறு நிதியமுந் தேடிக்கொண்டு நும்மையும் வந்து மேவுவேன்; நீ சென்று அவள் வாடாத வண்ணம் யான் பிரிந்தமை கூறி ஆற்றுவித்துக்கொண்டிருப்பாயாகவெனத் தலைமகன் றான் வரைபொருட்குப் பிரிகின்றமை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

268. குன்றங் கிடையுங் கடந்துமர்
        கூறும் நிதிகொணர்ந்து
    மின்றங் கிடைநும் மையும்வந்து
        மேவுவன் அம்பலஞ்சேர்

________________________________________________________________

விடுத்து எய்தத் துணி - எமராற் றொடுக்கப்பட்டன வாகிய பொருள்களை நீ வரவிட்டு வரைந்தெய்தத் துணிவாயாக எ-று.

    நீள்வகிர்க் கண்ணியாகிய வெண்ணித்தில வாணகைக் கென்றுரைப்பினுமமையும். தொடுத்தன - பலவாக வகுக்கப்பட்டன. படுத்தன நீள்கழலென்பதூஉம் பாடம். சிற்றம்பலந்தாம் பணியார்க் கடுத்தன தாம் வருகையாவது கெர்ப்பம் வருகை. அடுத்தன தாம் வரினென்பதற்கு நீ வரினெமக்கடுத்தனதா முளவா மென்று பொருளுரைப்பாருமுளர். அடுத்தனதான் வரினென்பது பாட மாயின், தானென்பது அசைநிலை. இவை இரண்டிற்கும் மெய்ப்பாடு: பெருமிதம் பயன்: அது.

267

18.3.  ஆங்க வள்வயின் நீங்க லுற்றவன்
      இன்னுயிர்த் தோழிக்கு முன்னி மொழிந்தது.

   
இதன் பொருள்: மின் தங்கு இடை - மின்போலுமிடையை யுடையாய்; குன்றங் கிடையும் கடந்து - இனிக் குன்றக்கிடப்புக்களை