பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
487

உயர

வரை பொருட் பிரிதல்

உயர்ந்தும் பணிந்தும் உணரான
        தம்பலம் உன்னலரின்
    துயர்ந்தும் பிறிதி னொழியினென்
        ஆதுந் துறைவனுக்கே.

287

18.23 வெறிவிலக்குவிக்க நினைதல்

   
வெறிவிலக்குவிக்க நினைதல் என்பது இருவாற்றானு நமக்குயிர்வாழு நெறியில்லை யாதலாற் றுறைவற்குற்ற நோயைப் பிறர் சிதைக்கப்படின், நாண்டுறந்தும் வெறிவிலக்குவிப்ப னெனத் தலைமகள் தோழியைக்கொண்டு வெறிவிலக்குவிக்க நினையாநிற்றல். அதற்குச் செய்யுள்-

288. சென்றார் திருத்திய செல்லல்நின்
        றார்கள் சிதைப்பரென்றால்
    நன்றா வழகிதன் றேயிறை
        தில்லை தொழாரின்நைந்தும்

____________________________________________________________

அறியப்படாதவன தம்பலத்தை நினையாதாரைப்போலத் துயரமுற்று மெனக்கூட்டுக.

    மறியறுத்தற்கு முன்னுரைத்ததுரைக்க. பெயர்ந்து மென மெலிந்து நின்றது. உணரானென்றது செயப்படுபொருட்கண் வந்தது. தன்னைப்பிரிதல், துன்பமாய் இன்றியமையாத யாம் இத்தன்மைய மாகவும், அளிக்கின்றி லனெனவுட்கொண்டு, அவனை நாம் முன்னம் நெருங்கமுயங்கு மன்பாமாறெல்லாம் இன்றென்னா மென்னுங் கருத்தால், என்னாது மென்றாள். பிறிதுமொழியினென்பது பாட மாயின், வெறியினாற்றணி யாதாதலின் இந்நோய், பிறிதென்று பிறர் மொழியினென்றுரைக்க. மெய்ப்பாடு: அச்சத்தைச் சார்ந்த மருட்கை. பயன்: தலைமகள் தன்னெஞ்சொடு சொல்லி யாற்றுதல்.

287

18.23.  அயறருவெறியின் மயறருமென
      விலக்கலுற்ற குலக்கொடிநினைந்தது.


   
இதன் பொருள்: இறை தில்லை தொழாரின் நைந்தும்-இறைவனது தில்லையைத் தொழாதாரைப்போல வருந்தியும்; ஒன்றாம் இவட்கும் மொழிதல்கில்லேன்-நாணினா லென்னோ