18
வரை பொருட் பிரிதல்
18.24 அறத்தொடு நிற்றலையுரைத்தல்
அறத்தொடு நிற்றலையுரைத்தல் என்பது
நாண்டுறந்தும் மறையுரைத்தும் வெறிவிலக்குவிக்க நினையாநின்ற தலைமகள், மேலறத்தொடு நிற்பாளாக,
அயலாரேசுக; ஊர்நகுக; அதுவேயுமன்றி, யாயும்வெகுள்வளாக, அதன்மேல் நீயுமென்னை முனிவாயாக; நீ தேறாயாகிற்
சூளுற்றுத்தருவேன்; யான் சொல்லுகின்ற விதனைக் கேட்பாயாக எனத் தோழிக்குக் கூறாநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
289. யாயுந் தெறுக அயலவ
ரேசுக ஊர்நகுக
நீயும் முனிக நிகழ்ந்தது
கூறுவ லென்னுடைய
வாயும் மனமும் பிரியா
இறைதில்லை வாழ்த்துநர்போல்
தூயன் நினக்குக் கடுஞ்சூள்
தருவன் சுடர்க்குழையே.
289
_____________________________________________________________
18.24. வெறித்தலை வெரீஇ
வெருவரு தோழிக்
கறத்தொடு நின்ற ஆயிழை யுரைத்தது.
இதன் பொருள்: சுடர்க்
குழை - சுடர்க்குழையையுடையாய்; என்னுடைய வாயும் மனமும் பிரியா இறை தில்லை வாழ்த்துநர் போல்
தூயன்-எனதுவாயையு மனத்தையும் பிரியாத விறைவனது தில்லையை வாழ்த்துவாரைப்போலத் தூயேன்; நினக்குக்
கடுஞ் சூள் தருவன் - நீதேறாயாயின் நினக்குக்கடிய குளுறவையுந் தருவேன்; அயலவர் ஏசுக-அயலாரேசுக;
ஊர் நகுக - ஊர் நகுவதாக; யாயுந் தெறுக - அவற்றின்மேலே யாயும் வெகுள்வாளாக; நீயும்முனிக -
அதுவேயுமன்றி நீயுமென்னை முனிவாயாக; நிகழ்ந்தது கூறுவல் - புகுந்ததனை யான் கூறுவேன்; கேட்பாயாக
எ-று.
தூயேனென்றது தீங்குகரந்த
வுள்ளத்தேனல்லேனென்றவாறு. தூயனெனக் கென்பது பாடமாயின், எனக்கியான்றூயே னென்றுரைக்க, அறத்தொடுநின்ற-அறத்தொடுகூடிநின்ற.
வெரீஇ யுரைத்ததென வியையும். அலங்காரம்: பரியாயம் பொருண்முரணுமாம். மெய்ப்பாடு: பெருமிதம்.
பயன்: அறத்தொடு நிற்றல்.
289
|