பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
495

வரை பொருட் பிரிதல்

சினக்களி யானை கடிந்தா
        ரொருவர்செவ் வாய்ப்பசிய
    புனக்கிளி யாங்கடி யும்வரைச்
        சாரற் பொருப்பிடத்தே.

293

________________________________________________________________

வார்கழல்கள் எனக்கு அளியாநிற்கும் அம்பலத்தோன் இருந்தண்கயிலை-எனக்குத் தன்னுடைய நீண்டகழலையுடைய திருவடிகளை யளியாநிற்கும் அம்பலத்தானது பெரிதாகிய குளிர்ந்த கயிலைக்கண்; புனச் செவ் வாய்ப் பசிய கிளி யாம் கடியும் வரைச் சாரல் பொருப்பிடத்து - எம்புனத்தின்கண் வருஞ் செவ்வாயை யுடைய பசியகிளிகளை யாங்கடியும் வரையடியினுண்டாகிய பொருப் பிடத்தின்கண்வந்து; ஒருவர் - ஒருவர்; சினக்களி யானை கடிந்தார் - எம்மேல்வருஞ் சினத்தையுடைய களியானையை மாற்றிளார்; இனியடுப்பது செய்வாயாக எ-று.

    கயிலையென்றது கயிலையையணைந்த விடத்தை; கடியும் பொருப்பென வியையும். வரை - உயர்ந்தவரை. பொருப்பு - பக்கமலை, கிளிகடியும் பருவமென்ற தனாற் கற்பினோடு மாறு கொள்ளாமை முதலாயின கூறினாளாம்.  மெய்ப்பாடு:  அது.  பயன்: வெளிப்படையாலறத்தொடு நிற்றல்.

293