18
வரை பொருட் பிரிதல்
18.30
தேர்வரவுகூறல்
தேர்வரவுகூறல் என்பது நற்றாய்க்குச்
செவிலி யறத்தொடு நில்லாநிற்ப, அந்நிலைமைக்கட் டலைமகனது தேரொலி கேட்ட தோழி, உவகையோடு
சென்று, தலைமகளுக்கு அதன் வரவெடுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
295. கள்ளினம் ஆர்த்துண்ணும்
வண்கொன்றை
யோன்தில்லைக்
கார்க்கடல்வாய்ப்
புள்ளின மார்ப்பப்
பொருதிரை
யார்ப்பப் புலவர்கடம்
வள்ளின மார்ப்ப மதுகர
மார்ப்ப வலம்புரியின்
வெள்ளின மார்ப்ப
வரும்பெருந்
தேரின்று மெல்லியலே.
295
______________________________________________________________
18.30. மணிநெடுந் தேரோன்
அணிதினின் வருமென
யாழியன் மொழிக்குத் தோழி
சொல்லியது.
இதன் பொருள்: மெல்லியல்
- மெல்லியால்; கள் இனம் ஆர்த்து உண்ணும் வண் கொன்றையோன் தில்லைக் கார்க் கடல் வாய்
- கள்ளை வண்டினங்களார்த்துண்ணும் வளவிய கொன்றைப் பூவையுடையவனது தில்லையை யணைந்த கரியகட
லிடத்து; புள் இனம் ஆர்ப்ப - ஆண்டுப் படியும் புள்ளினங்களார்ப்ப; பொருதிரை ஆர்ப்ப -
கரையைப்பொருந் திரைகளார்ப்ப; புலவர்கள் தம் வள் இனம் ஆர்ப்ப - அவ்வாரவாரத்தோடு மங்கலங்கூறும்
புலவர்க டமது வள்ளிய வினமார்ப்ப; மதுகரம் ஆர்ப்ப-நறுவிரையால் வண்டுகளார்ப்ப; வலம்புரியின்
வெள் இனம் ஆர்ப்ப-வலம்புரியினது வெள்ளிய வினமார்ப்ப; இன்று பெருந்தேர் வரும்-இன்று நங்காதலர்
பெருந்தேர் வாராநின்றது எ-று.
கரந்தவொழுக்கத்து மணியொலியவித்து
வந்ததேர், வரைந்தெய்த இவ்வரவத்தோடு வருமென மகிழ்ந்து கூறியவாறு. கள் என்பது வண்டினுளொரு சாதியென்பாரு
முளர். புள்ளினத்தையும் பொருதிரையையும் அவன் வரவிற்கு உவந்தார்ப்பனபோலக் கூறினாள். இதனை
மிகைமொழிப்பாற் படுத்திக் கொள்க. முன்னர்த்
|