பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
500

கடக

வரை பொருட் பிரிதல்

    கடக்களி யானை கடிந்தவர்க்
        கோவன்றி நின்றவர்க்கோ
    விடக்களி யாம்நம் விழுநக
        ரார்க்கும் வியன்முரசே.

297

18.33 நிதிவரவு கூறாநிற்றல்

   
நிதிவரவு கூறாநிற்றல் என்பது முரசொலிகேட்டு ஐயுற்றுக் கலங்காநின்ற தலைமகளுக்கு, நமர் வேண்டினபடியே அருங்கலங் கொடுத்து நின்னை வரைந்துகொள்வாராக, யானைகடிந்தார் நமது கடைமுன் கொணர்ந்திறுத்தார் குறைவில்லாத நிதி; இதனை நீ காண்பாயாகவெனத் தோழி மகிழ்தருமனத்தொடு நின்று நிதி வரவு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

298. என்கடைக் கண்ணினும் யான்பிற
        வேத்தா வகையிரங்கித்
    தன்கடைக் கண்வைத்த தண்தில்லைச்
        சங்கரன் தாழ்கயிலைக்

________________________________________________

அடற்களி - அடுதல் செய்யாத பேரின்பம். அடக்களி யென்பது பாடமாயின், பேரின்பம் யானென்னு முணர்வினைக் கெடுப்பவென்றுரைக்க. மெய்ப்பாடு: அச்சத்தைச்சார்ந்த மருட்கை. பயன்: ஐயந்தீர்தல்.

297

18.33.  மகிழ்தரு மனத்தொடு வண்புகழ்த் தோழி
      திகழ்நிதி மடந்தைக்குத் தெரிய வுரைத்தது.

   
இதன் பொருள்: கடை என் கண்ணினும்-கடையாகிய வென்னிடத்தும்; யான் பிற ஏத்தா வகை இரங்கித் தன் கடைக்கண் வைத்த - யான் பிறதெய்வங்களை யேத்தாதவண்ண மிரங்கித் தனது கடைக்கண்ணைவைத்த; தண் தில்லைச் சங்கரன் தாழ்கயிலை - குளிர்ந்த தில்லைக்கணுளனாகிய சங்கரன் மேவுங்கயிலை யிடத்து; கொன்கடைக்கண் தரும் யானை கடிந்தார்-தமக்கொரு பயன் கருதாது நமக்கிறுதியைப்பயக்கும் யானையை யன்றுகடிந்தவர்; கொணர்ந்து இறுத்தார் - கொணர்ந்து விட்டார் விட; கடைக்கண் முன்வந்து