இ
மணஞ் சிறப்புரைத்தல்
இருந்து திவண்டன வாலெரி
முன்வலஞ் செய்திடப்பால்
அருந்துதி காணு மளவுஞ்
சிலம்பன் அருந்தழையே
300
______________________________________________________________
பெறுதற்கரிய தழைகள்; முன் எரி
வலம் செய்து - இப்பொழுது முன்றீயை வலங்கொண்டு; இடப்பால் அருந்துதி காணும் அளவும் - பின் வசிட்டனிடப்பக்கத்துத்
தோன்றும் அருந்ததியைக் காணும் அளவும்; தில்லை வாழ்த்தினர் போல் இருந்து திவண்டன - தில்லையை
வாழ்த்தினரைப்போல வாடாதிருந்து விளங்கின எ-று.
இருந்துதி என் வயின் கொண்டவன்
- அன்பர் துதிப்ப அவர் வயிற் றான்கொள்ளும் பெருந்துதியை என்வயினுண்டாக்கிக் கொண்டவன்;
யான் எப்பொழுதும் உன்னும் மருந்து - யானெப் பொழுது முன்னும் வண்ணஞ் சுவையுடைத்தாயதோர்
மருந்து; திசைமுகன் மாற்கு அரியோன்-இவ்வாறெனக்கெளியனாயினுந் திசை முகற்கும் மாற்கு மரியான்;
தில்லை-அவனது தில்லையெனக் கூட்டுக.
என்றது தழைகளை வாடாமல்
வைத்து, அத்தழையே பற்றுக்கோடாக ஆற்றியிருந்தாளெனத் தலைமகளை மகிழ்ந்து கூறியவாறு, திவண்டன
வென்பதற்கு வாடாதிருந்து இவளைத் தீண்டியின்புறுத்தின வென்றுரைப்பினுமமையும். தழை வாடா திருந்தனவென்றது
முன்னர்த் தான் அவன்றந்த தழையையேற்ற முகூர்த்தத்தைக் கொண்டாடியவாறு. மெய்ப்பாடு: உவகை
பயன்: மகிழ்தல். வேயினமென்றோள் (பா. 282) என்னுமதுதொட்டு இதுகாறும் வர இப்பாட்டுப் பத்தொன்பதும்
அறத்தொடு நிலையினையும், அதன் பின்னர் வரைதலையும் நுதலினவென்பது. அகத்தினையின் மிகத் திகழும்
இன்பக் கலவி இன்பக் களவு முற்றிற்று. எண்பத்தொராம் பாட்டு முதல் இப்பாட்டீறாகத் தோழி
யாலாய கூட்டம்.
300
|