|
19
மணஞ் சிறப்புரைத்தல்
19.3 வழிபாடு கூறல்
வழிபாடுகூறல் என்பது மணஞ்செய்த
பின்னர் மணமனை காணவந்த செவிலிக்கு, காவலர் உடம்புமுயிரும்போல ஒருவரை யொருவர் இன்றியமையாமையால்
இவள் கருத்தைக் கடவார்; கமலங் கலந்த தேனுஞ் சந்தனமரமும் போல வியைந்து இவள் கற்புவழி நிற்றலையுடையராய்
இவள் வழியே நின்றொழுகா நின்றாரெனத் தோழி தலைமகன் றலைமகள் வழி யொழுகா நின்றமை கூறாநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
301. சீரியல் ஆவியும்
யாக்கையும்
என்னச் சிறந்தமையாற்
காரியல் வாட்கண்ணி எண்ணக
லார்கம லங்கலந்த
_____________________________________________________________
19.3. மணமனை காண வந்தசெவி
லிக்குத்
துணைமலர்க் குழலி தோழி
சொல்லியது.
இதன் பொருள்: அன்னே -
அன்னாய்; கார் இயல் கண்டர் வண்தில்லை வணங்கும் எம் காவலர் - கார்போலுங் கண்டத்தையுடையவரது
வளவிய தில்லையைவணங்கு மெம்முடைய காவலர்; சீர் இயல் ஆவியும் யாக்கையும் என்னச் சிறந்தமையால்
- சீர்மையியலு முயிருமுடம்பும்போல ஒருவரையொருவர் இன்றியமையாமையால்; கார் இயல் வாள் கண்ணி
எண் அகலார் - கரியவியல்பை யுடைய வாள் போலுங் கண்ணையுடையாளது கருத்தைக்கடவார்; கமலம் கலந்த
வேரியும் சந்தும் வியல் தந்தென -தாமரைப் பூவைச் சேர்ந்த தேனுஞ் சந்தனமரமும் இடத்துநிகழ்
பொருளுமிடமுமாய் இயைந்து தம்பெருமையைப் புலப்படுத்தினாற் போல இயைந்து; கற்பின் நிற்பர்-இவளது
வழிபாட்டின் கண்ணே நிற்பர் எ-று.
எண்ணகலா ரென்றதனாற் காதலியாதலும்,
கற்பினிற்ப ரென்றதனால் வாழ்க்கைத்துணையாதலுங் கூறப்பட்டன. ஆவியும் வேரியும் தலைமகட் குவமையாகவும்,
யாக்கையுஞ் சந்தும் தலைமகற்குவமையாகவுமுரைக்க. பிரித்துவமையாக்காது, இவரது கூட்டத்திற்கு அவற்றது
கூட்டமுவமையாக வுரைப்பினுமமையும், காரியல் கண்டர்வண்டில்லை வணங்கு மென்றதனான்,
|