| 20 
ஓதற்
பிரிவு 
20.1 கல்விநலங்கூறல்
 கல்விநலங் கூறல் என்பது வரைந்துகொண்ட
பின்னர் ஓதற்குப் பிரிய லுறாநின்ற தலைமகன், தலைமகளுக்குப் பிரிவு ணர்த்துவானாக மிகவுங் கூற்றாற்
கற்றோர் நன்மைக்கெல்லை யில்லாத தன்மைய ராவரெனத் தோழிக்குக் கல்விநலங் கூறாநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
 
308. சீரள வில்லாத் திகழ்தருகல்விச்செம் பொன்வரையின்
 ஆரள வில்லா அளவுசென்
 றாரம் பலத்துள்நின்ற
 ஓரள வில்லா ஒருவன்
 இருங்கழ லுன்னினர்போல்
 ஏரள வில்லா அளவின
 ராகுவ ரேந்திழையே.
 
308 
_____________________________________________________________ 
20.1.  கல்விக் ககல்வர் செல்வத்
தவரெனச்செறிகுழற் பாங்கிக் கறிவறி
வித்தது.
 
 இதன் பொருள்: ஏந்திழை
- ஏந்திழையாய்; சீர் அளவு இல்லாத் திகழ்தரு கல்விச் செம்பொன் வரையின் ஆரளவு இல்லா அளவு
சென்றார்-நன்மைக்கெல்லையில்லாத விளங்குங் கல்வி யாகிய மேருக் குன்றத்தினது மிக்கவளவில்லாத
வெல்லையை யடைந்தவர்கள்; அம்பலத்துள் நின்ற ஓரளவு இல்லா ஒருவன் இரும் கழல் உன்னினர்
போல் - அம்பலத்தின்கணின்ற ஓரளவையுமில்லாத ஒப்பில்லாதானுடைய பெரிய திருவடிகளையறிந்து நினைந்தவரைப்
போல; ஏர் அளவு இல்லா அளவினர் ஆகுவர்-நன்மைக் கெல்லையில்லாத தன்மையராவர் எ-று.
 
 செம்பொன் வரை யென்றான்,
தூய்மையும் பெருமையுங் கலங்காமையுமுடைமையால். கற்றதின் மேலுங் கற்க நினைக்கின்றானாதலான்,
ஆரளவில்லா வளவு சென்றா ரென்றான். ஆரளவு காதமும் புகையு முதலாயின அளவு. ஓரளவென்பது காட்சியும்
அனுமானமு முதலாயினவளவு. இது குறிப்பெச்சம். செல்வத்தவர்-இல்வாழ்க்கைச் செல்வத்தவர். அறிவறிவித்தது
- அறியப்படுவதனை யறிவித்தது. பாங்கியறிவறி வித்ததென்பது பாடமாயின்,
 |