பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
521

உறுகட

காவற் பிரிவு

    உறுகட் டழலுடை யோனுறை
        யம்பலம் உன்னலரின்
    துறுகட் புரிகுழ லாயிது
        வோவின்று சூழ்கின்றதே.

313

________________________________________________________________

முகத்தினையு முடைய யானையினது வருத்தும் வளைப்புக்கெடக் குரவராற் பாதுகாக்கப்படு முற்காலத்து நம்மை யுய்வித்தவர்; கருப்புச் சிலையோன் உறு கண் தழல் உடையோன் உறை அம்பலம் உன்னலரின்-கருப்பு வில்லையுடையவனைச் சென்றுற்ற கண்ணிற்றீயை யுடையவனுறையும் அம்பலத்தை யுன்னாதாரைப் போல; இன்று சூழ்கின்றது இதுவோ-கண்ணோட்ட மின்றித் தம்மல்ல தில்லாத இக்காலத்து நினைக்கின்றதிதுவோ! இது தகுமோ! எ-று.

   
கருப்புச்சிலையோ னென்பதனை எழுவாயாக்கி யுரைப்பினுமமையும். தெறுகட்டழீஇ முன்னமுய்யச் செய்தோரென்பது பாடமாயின். தெறுகின்றவிடத்துத் தழுவி முன்னம்மையுய்வித்தவரென்றுரைக்க. மெய்ப்பாடு: அழுகை. பயன்: செலவழுங்கு வித்தல்.

313

காவற்பிரிவு முற்றிற்று.