பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
523

New Page 1

பகை தணி வினைப் பிரிவு

    தொகைதணித் தற்கென்னை யாண்டுகொண்
        டோன்தில்லைச் சூழ்பொழில்வாய்
    முகைதணித் தற்கரி தாம்புரி
        தாழ்தரு மொய்குழலே.

314

22.2 வருத்தந்தணித்தல்

   
வருத்தந்தணித்தல் என்பது தலைமகனது பிரிவுகேட்டு உள்ளுடைந்து தனிமையுற்று வருந்தாநின்ற தலைமகளை, நின்னை விட்டு அவர் பிரியார்; நீ நெருப்பையுற்ற வெண்ணெயும் நீரையுற்ற உப்பும்போல இவ்வாறுருகித் தனிமையுற்று வருந்தாதொழியெனத் தோழி அவளது வருத்தந் தணியா நிற்றல். அதற்குச் செய்யுள்-

315. நெருப்புறு வெண்ணெயும் நீருறும்
        உப்பு மெனஇங்ஙனே
    பொருப்புறு தோகை புலம்புறல்
        பொய்யன்பர் போக்குமிக்க

______________________________________________________________

மாற்றுதற் கரிதாஞ் சுருண்ட தாழ்ந்த நெருங்கிய குழலை யுடையாய்; மிகை தணித்தற்கு அரிதாம் - ஒருவருள்ள மிகுதியை ஒருவர்தணித்தற் கரிதாகாநின்ற; இருவேந்தர் வெம்போர் மிடைந்த பகை தணித்தற்கு நமர் படர்தல் உற்றார் - இருவேந்தரது வெய்யபோர் நெருங்கிய பகையை மாற்றுதற்கு நமர் போக நினைந்தார் எ-று.

    எளிதினிற் சந்து செய்வித்துக் கடிதின் மீள்வரென்பது பயப்ப, மிகைதணித்தற்கரிதா மிருவேந்த ரென்றதனால் ஒத்த வலியின ராதலும், வெம்போர்மிடைந்த வென்றதனால் ஒத்த தொலைவின ராதலுங் கூறினாளாம். மிகை தணித்தற்கரிதாம் பகையென வியையும். மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: பகை தணிவினையிடைப் பிரிவுணர்த்துதல்.

314

22.2.  மணிப்பூண் மன்னவன் தணப்ப தில்லை
     அஞ்சல் பொய்யென வஞ்சியைத் தணித்தது.


   
இதன் பொருள்: மிக்க விருப்புறுவோரை விண்ணோரின் மிகுத்து-தன்கண் மிக்க விருப்புறுமவரை விண்ணோரினு மிகச்