பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
524

பகை தணி வினைப் பிரிவு

    விருப்புறு வோரைவிண் ணோரின்
        மிகுத்துநண் ணார்கழியத்
    திருப்புறு சூலத்தி னோன்தில்லை
        போலுந் திருநுதலே.

315

_______________________________________________________________

செய்து; நண்ணார் கழியத் திருப்புறு சூலத்தினோன் தில்லை போலும் திருநுதல் - பகைவர் மாய விதிர்க்கப்படுஞ் சூலவேலையுடையவனது தில்லையை யொக்குந் திருநுதால்! ; பொருப்பு உறு தோகை - பொருப்பைச் சேர்ந்த மயில்போல்வாய்; நெருப்பு உறு வெண்ணெயும் நீர் உறும் உப்பும் என - தீயையுற்ற வெண்ணெயும் நீரையுற்றவுப்பும் போல; இங்ஙனே புலம்புறல் - இவ்வாறுருகித் தனிமையுறாதொழி; அன்பர் போக்குப் பொய்-அன்பர்போக்குப் பொய் எ-று.

    மிகுத்தென்னும் வினையெச்சம் திருப்புறுசூல மென்புழித் திருப்பென்பதனோடு முடிந்தது. மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: தலைமகளை யாற்றுவித்தல்.

315

பகைதணி வினைப்பிரிவு முற்றிற்று.