| 23 
வேந்தற் குற்றுளிப்
பிரிவு 
23.1 பிரிந்தமைகூறல்
 பிரிந்தமைகூறல் என்பது தம்மைவந்தடைந்த
வேந்தனுக்குத்தா முதவிசெய்வாராக வெய்ய போரையுடைய பாசறைமேல் நமர் சென்றார்; இனி யவ்வேந்தன்
பகைவரா லிடப்பட்ட மதில் இன்றென்னாய் முடியுமோவெனத் தலைமகன் வேந்தற்குற்றுழிப் பிரிந்தமை
தோழி தலைமகளுக்குக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
 
316. போது குலாய புனைமுடிவேந்தர்தம் போர்முனைமேல்
 மாது குலாயமென் னோக்கிசென்
 றார்நமர் வண்புலியூர்க்
 காது குலாய குழையெழி
 லோனைக் கருதலர்போல்
 ஏதுகொ லாய்விளை கின்றதின்
 றொன்னா ரிடுமதிலே.
 
316 
_________________________________________________ 
23.1.  விறல்வேந்தர் வெம்முனைக்கண்திறல்வேந்தர் செல்வரென்றது.
 
 இதன் பொருள்: மாது குலாய
மெல் நோக்கி - மடவழகு பெற்ற மெல்லிய நோக்கத்தையுடையாய்; போது குலாய புனைமுடி வேந்தர் தம்
போர் முனைமேல் - பூவழகுபெற்ற பேணிச் செய்யப்பட்ட முடியையுடைய வேந்தர் தமது போரையுடைய பாசறைமேல்;
நமர் சென்றார் - நமர் சென்றார்; வண் புலியூர்க் காது குலாய குழை எழிலோனைக் கருதலர் போல்
- வளவிய புலியூரிற் காதழகு பெற்ற குழையாலுண்டாகிய எழிலையுடையவனைக் கருதாதாரைப்போல; ஒன்னார்
இடும் மதில் இன்று ஏதாய் விளைகின்றது - ஒன்னாராலிடப்பட்ட மதில் இன்றியாதாய் முடியுமோ! எ-று.
 
 வினைமுடித்துக் கடிதுமீள்வரென்பதுபயப்ப,
ஒன்னாரிடுமதிலின்றே யழியுமென்று கூறினாளாம். கொல்லென்பது அசைநிலை. சென்றாரெனத் துணிவு பற்றி
இறந்தகாலத்தாற் கூறினாள். திறல் வேந்தரென்றது, சாதிபற்றியன்று; தலைமை பற்றி. மெய்ப்பாடு:
அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: வேந்தற்குற்றுழிப் பிரிவுணர்த்துதல்.
 
316 |