பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
527

23

வேந்தற் குற்றுளிப் பிரிவு

23.2 பிரிவாற்றாமைகார்மிசைவைத்தல்

   
பிரிவாற்றாமைகார் மிசைவைத்தல் என்பது பிரிவுகேட்ட தலைமகள், தனது வருத்தங்கண்டு காதலர் வினைவயிற்பிரிய நீ வருந்தினால் வினைமுடியுமாறென்னோ வென்ற தோழிக்கு, யானவர் பிரிந்ததற்கு வருந்துகின்றேனல்லேன்; இக்கார்முகில் சென்று அப்பாசறைக்கண்ணே தோன்றுமாயின், நம்மை நினைந்தாற்றாராய், அவ்வினை முடிக்கமாட்டாரென்று அதற்கு வருந்துகின்றே னெனக் கார்மிசைவைத்துத் தனது வருத்தங் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

317. பொன்னி வளைத்த புனல்சூழ்
        நிலவிப் பொலிபுலியூர்
    வன்னி வளைத்த வளர்சடை
        யோனை வணங்கலர்போல்
    துன்னி வளைத்தநந் தோன்றற்குப்
        பாசறைத் தோன்றுங்கொலோ
    மின்னி வளைத்து விரிநீர்
        கவரும் வியன்முகிலே.

317.

________________________________________________

23.2.  வேந்தற் குற்றுழி விறலோன் பிரிய
      ஏந்திழை பாங்கிக் கெடுத்து ரைத்தது.

   
இதன் பொருள்: பொன்னி வளைத்த புனல் சூழ் நிலவிப் பொலிபுலியூர்-பொன்னி சுற்றுதலானுண்டாகிய புனலாற் சூழப்பட்ட நிலைபெற்றுப் பொலிகின்ற புலியூரில்; வன்னி வளைத்த வளர் சடையோனை வணங்கலர் போல் - வன்னித்தளிராற் சூழப்பட்ட நெடிய சடையையுடையவனை வணங்காதாரைப்போல; துன்னி வளைத்த நம் தோன்றற்கு - இடர்ப்படப் பகைவரைக்கிட்டிச் சூழ்போகிய நம்முடைய தோன்றற்கு; மின்னி வளைத்து விரிநீர் கவரும் வியன் முகில் - மின்னி யுலகத்தை வந்துவளைத்துப் பரந்த கடலைப்பருகும் பெரியமுகில்; பாசறைத் தோன்றும் கொல் -பாசறைக்கண்ணே சென்று தோன்றுமோ! எ-று.

   
வளைத்தலை விரிநீர்மேலேற்றினுமமையும். தோன்றுமாயின் அவர் ஆற்றாராவரென யானாற்றேனாகின்றேனென்பது கருத்து. பொன்னிவளைத்த புனலென்பதற்குப் பொன்னியாற்றகையப்பட்ட