பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
531

புற

வேந்தற் குற்றுளிப் பிரிவு

புற்றில வாளர வன்தில்லைப்
        புள்ளுந்தம் பிள்ளைதழீஇ
    மற்றினஞ் சூழ்ந்து துயிலப்
        பெறுமிம் மயங்கிருளே.

320

23.6 பின்பனி நினைந்திரங்கல்

   
பின்பனி நினைந்திரங்கல் என்பது இப்பெரியபனிவையமெங்கும் பரந்து துவலைகளைப் பரப்பியவாறு அவள் பொறுக்குமளவன்று; அவளைச் சொல்லுகின்றதென்! எனக்கு மாற்றுதலரிதென்பது போதர, மிக்க தனிமையையுடையார்க்கு இப்பனி, வான் சரத்தைத் தருமாயின், அதனோடொக்குமெனத் தலைமகன் தலைமகளது துயரநினைந் திரங்காநிற்றல். அதற்குச் செய்யுள்-

321. புரமன் றயரப் பொருப்புவில்
        லேந்திப்புத் தேளிர்நாப்பண்
    சிரமன் றயனைச்செற் றோன்தில்லைச்
        சிற்றம் பலமனையாள்

___________________________________________________________

23.6.  இரும் பனியின் எதிர்வு கண்டு
      சுரும்பிவர் குழலி துயரம் நினைந்தது.

   
இதன் பொருள்இரும் பனி வையம் எங்கும் பரந்து பாரித்தவா-பெரிய பனி வையமெங்கும் பரந்து துவலைகளைப் பரப்பியவாறு; தில்லைச் சிற்றம்பலம் அனையாள் பரம் அன்று - தில்லையிற் சிற்றம்பலத்தை யொப்பாளதளவன்று; மிக்க தமியருக்கு - மிக்க தனிமையையுடையார்க்கு இப்பனி; அன்றி - உயிர்கவர வெகுண்டு; வான் சரம் தருமேல் - வான் சரத்தைத் தருமாயின்; ஒக்கும் - அதனோடொக்கும் எ-று.

   
புரம் அயர அன்று பொருப்புவில் ஏந்தி - புரம்வருந்த அன்று பொருப்பாகிய வில்லை யேந்தி; புத்தேளிர் நாப்பண் - தேவர்நடுவே; அயனை அன்று சிரம் செற்றோன் தில்லைச் சிற்றம்பலம் - அவர்க்குத் தலைவனாகிய அயனையன்று சிரமரிந்த வனது தில்லைச் சிற்றம்பலமெனக் கூட்டுக.