பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
532

பரமன

வேந்தற் குற்றுளிப் பிரிவு

    பரமன் றிரும்பனி பாரித்த
        வாபரந் தெங்கும்வையஞ்
    சரமன்றி வான்தரு மேலொக்கும்
        மிக்க தமியருக்கே.

321

23.7 இளவேனில் கண்டின்ன லெய்தல்

   
இளவேனில்கண்டின்னலெய்தல் என்பது மேன்மேலும் நிறம் பெற்றிருளாநின்ற இக்குயில்கள், மாம்பொழிலைச் சுற்றும் வந்து பற்றின; இனி யுயிர்வாழுமா றொன்றுங் கண்டிலே னெனத் தலைமகள் இளவேனில்கண் டின்னலெய்தாநிற்றல். அதற்குச் செய்யுள்-

322. வாழும் படியொன்றுங் கண்டிலம்
        வாழியிம் மாம்பொழில்தேன்
    சூழும் முகச்சுற்றும் பற்றின
        வால்தொண்டை யங்கனிவாய்

________________________________________________

பரந்தெங்குந் தருமேலென்றியைப்பினுமமையும். (அன்றுவானென்பது பாட மாயின் வையத்தை யன்றி அவ்வானமுமென உரைக்க) இக்காலத்து அவளாற்றாமை சொல்லவேண்டுமோ எனக்கு மாற்றுலதரி தென்பது போதரத் தமியருக்கெனப் பொதுமையாற் கூறினான். இதனைத் தோழி கூற்றாகவுரைப்பாருமுளர். மெய்ப்பாடு: அது. பயன்: தலைமகளை யாற்றுவித்தல்.

321

23.7.  இன்னிள வேனில் முன்னுவது கண்டு
      மென்னகைப் பேதை இன்ன லெய்தியது.

   
இதன் பொருள்அம் தொண்டைக் கனிவாய் - அழகிய தொண்டைக்கனி போலும் வாயினையும்; யாழின் மொழி மங்கை பங்கன் சிற்றம்பலம் ஆதரியா - யாழோசைபோலு மினிய மொழியினையுமுடைய மங்கையது கூற்றையுடையானது சிற்றம்பலத்தை விரும்பாத; கூழின் மலி மனம் போன்று-உணவாற் செருக்கு மனம் போல; இருளா நின்ற கோகிலம் - ஒரு காலைக் கொருகால் நிறம் பெற்றிருளாநின்ற குயில்கள்; இம்மாம் பொழில் தேன் சூழும்முகச் சுற்றும் பற்றின - இம் மாம் பொழிற்கட் குடைதலாற் றேன் சுற்று முகமெங்கும் வந்துபற்றின; வாழும் படி ஒன்றும் கண்டிலம் - இனி யுயிர்வாழுமா றொன்றுங் கண்டிலேம் எ-று.