பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
534

வேந்தற் குற்றுளிப் பிரிவு

    காண்பதன் றேயின்று நாளையிங்
        கேவரக் கார்மலர்த்தேன்
    பாண்பதன் தேர்குழ லாயெழில்
        வாய்த்த பனிமுகிலே.

323

23.9 பருவமன்றென்று கூறல்

   
பருவமன்றென்று கூறல் என்பது காரும் வந்தது; காந்தளும் மலராநின்றன; காதலர் வாராதிருந்த தென்னோ வென்று கலங்காநின்ற தலைமகளுக்கு, சிற்றம்பலத்தின்கண்ணே குடமுழா முழங்க அதனையறியாது காரென்றுகொண்டு இக்காந் தண்மலர்ந்தன; நீ யிதனைப் பருவமென்று கலங்காதொழியெனத் தலைமகன் வரவு நீட்டித்தலால் தோழி அவள் கலக்கந்தீரப் பருவத்தைப் பருவ மன்றென்று கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

324. தெளிதரல் காரெனச் சீரனஞ்
        சிற்றம் பலத்தடியேன்
    களிதரக் கார்மிடற் றோன்நட
        மாடக்கண் ணார்முழவந்

____________________________________________________________

அரன் - புலியூரரன்; மிடற்றின் மாண்பது என்றே எண - அவனது மிடற்றி னழகதாமென்று கருதும்வண்ணம்; எழில் வாய்த்த பனிமுகில் வானின் மலரும் - எழில்வாய்த்தலையுடையவாகிய பனிமுகில்கள் வானிடத்துப் பரவாநிற்கின்றன; அதனான், மணந்தவர் தேர் இன்று நாளை இங்கே வரக் காண்பது அன்றே - நம்மைக்கலந்தவரது தேர் இன்றாக நாளையாக இங்கே வாராநிற்பக் காணப்படுவதல்லவே? இனி யாற்றாயாகற்பாலையல்லை எ-று.

    தேரிங்கே வருவதனைக் காணுமதல்லவே இனியுள்ளதென மொழிமாற்றியுரைப்பினுமமையும். கான்மலரென்பதூஉம், எழில்வாய வென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: தலைமகளை வற்புறுத்தல்.

323

23.9.  காரெனக் கலங்கும் ஏரெழிற் கண்ணிக்கு
      இன்றுணை தோழி யன்றென்று மறுத்தது.


   
இதன் பொருள்: அடியேன் களி தர - அடியேன் களிப்பை யுண்டாக்க; சிற்றம்பலத்துக் கார் மிடற்றோன் நடம் ஆட-