பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
536

New Page 1

வேந்தற் குற்றுளிப் பிரிவு

போன்றிக் கடிமலர்க் காந்தளும்
        போந்தவன் கையனல்போல்
    தோன்றிக் கடிமல ரும்பொய்ம்மை
        யோமெய்யிற் றோன்றுவதே.

325

23.11. தேர்வரவு கூறல்

   
தேர்வரவு கூறல் என்பது மறுத்துக்கூறின தலைமகளுக்கு, கொண்டல்கள் எட்டுத்திசைக்கண்ணும் வாராநின்றமையின், இது பருவமே; இனியுடன்றமன்னர் தம்முட் பொருந்துதலான் நம்மைக் கலந்தவர் தேர் நம்மில்லின்கணின்று வந்து தோன்றுமென்று அவள் கலக்கந்தீரத் தோழி தலைமகனது தேர்வரவு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

326. திருமா லறியாச் செறிகழல்
        தில்லைச்சிற் றம்பலத்தெங்
    கருமால் விடையுடை யோன்கண்டம்
        போற்கொண்ட லெண்டிசையும்

_______________________________________________________________

கொண்டல்போலுங் கண்டத்தையுமுடையான்; குழை எழில் நாண் போன்று-அவனுடைய குழையும் எழிலையுடைய நாணுமாகிய பாம்பையொத்து; இக் கடி மலர்க் காந்தளும் போந்து - இக்கடிமலர்க் காந்தளினது துடுப்புக்களும் புறப்பட்டு; அவன் கை அனல் போல் - அவனதுகையிற் றீயைப் போல; தோன்றிக் கடி மலரும் மெய்யின் தோன்றுவது பொய்ம்மையோ-தோன்றியினது புதுமலரும் மெய்யாகத் தோன்றுகின்ற விது பொய்யோ! எ-று.

    கடியென்பது நாற்றம். கடிமலர் முதலாகிய தன்பொருட் கேற்றவடை. மெய்யிற்றோன்றுவ தென்பதற்கு மெய்போலத் தோன்றுவதெனினு மமையும். காந்தளு மின்றென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை நீங்குதல்.

325

23.11.  பூங்கொடி மருளப்
      பாங்கி தெருட்டியது.

   
இதன் பொருள்: திருமால் அறியா - திருமாலறியப்படாத; செறிகழல் தில்லைச் சிற்றம்பலத்து எம் கரு மால் விடை உடையோன் கண்டம் போல்-செறிந்த வீரக்கழலையுடைய திருவடியையுடைய