வ
வேந்தற் குற்றுளிப் பிரிவு
வருமா லுடன்மன் பொருந்தல்
திருந்த மணந்தவர்தேர்
பொருமா லயிற்கண்நல்
லாயின்று
தோன்றுநம் பொன்னகர்க்கே.
326
23.12 வினைமுற்றிநினைதல்
வினைமுற்றிநினைதல் என்பது வேந்தற்குற்றுழிப்
பிரிந்த தலைமகன், வினைமுற்றியபின்னர், கயலையும் வில்லையுங் கொண்டு மன்கோபமுங்காட்டி ஒரு
திருமுகம் வாராநின்றது; இனிக் கடிதுபோதுமெனத் தேர்ப்பாகன் கேட்பத் தலைமகளது முகநினைந்து கூறா
நிற்றல். அதற்குச் செய்யுள்-
327. புயலோங் கலர்சடை ஏற்றவன்
சிற்றம் பலம்புகழும்
மயலோங் கிருங்களி யானை
வரகுணன் வெற்பின்வைத்த
________________________________________________________________
தில்லையிற் சிற்றம்பலத்தின்கணுளனாகிய
எம்முடைய கரிய மாலாகிய விடையையுடையவனது கண்டம்போல விருண்டு; கொண்டல் எண் திசையும் வரும்
- கொண்டல்கள் எட்டுத் திசைக்கண்ணும் வாரா நின்றன; அதனால், பொரும் மால் அயில் கண் நல்லாய்
- தம்மிற்பொரும் பெரியவேல்போலுங் கண்ணையுடைய நல்லாய்; மணந்தவர் தேர் - நம்மைக் கலந்தவரது
தேர்; உடல் மன்பொருந்தல் திருந்த - உடன்றமன்னர் தம்முட் பொருந்துதல் திருந்துதலால்; நம்
பொன் நகர்க்கு இன்று தோன்றும் - நம் பொன்னையுடைய வில்லின்கண் இன்று வந்து தோன்றும் எ-று.
உடன்மன்பொருந்தறிருந்த மணந்தவரென்பதற்கு
மன்னர் பொருந் தும்வண்ணம் அவரைச் சென்று கூடினவரென்றுரைப் பாருமுளர். மெய்ப்பாடு: பெருமிதம்.
பயன்: தலைமகளையாற்றுவித்தல்.
326
23.12. பாசறை முற்றிப் படைப்போர்
வேந்தன்
மாசறு பூண்முலை மதிமுகம் நினைந்தது.
இதன் பொருள்: செயல்
ஓங்கு எயில் எரி செய்த பின்-செய்தலையுடைய உயர்ந்த மதிலை எரியாக்கியபின்; இன்று ஓர்
|