பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
538

கய

வேந்தற் குற்றுளிப் பிரிவு

    கயலோங் கிருஞ்சிலை கொண்டுமன்
        கோபமுங் காட்டிவருஞ்
    செயலோங் கெயிலெரி செய்தபின்
        இன்றோர் திருமுகமே.

327

______________________________________________________________

திருமுகம் - இன்று திருவையுடைய தொருமுகம்; கயல் - கயல் போலுங் கண்ணையும்; ஓங்கு இருஞ்சிலை கொண்டு - மிகப் பெரியவிற்போலும் புருவத்தையுமுடைத்தாய்; மன் கோபமும் காட்டி வரும் - தங்கிய விந்திரகோபம் போலும் வாயையுங் காட்டி வாராநின்றது; இனிக் கடிதுபோதும் எ-று.

    புயல் ஓங்கு அலர் சடை ஏற்றுவன் சிற்றம்பலம் புகழும் - நீரை உயர்ந்த விரிசடையின்கணேற்றவனது சிற்றம்பலத்தையே பரவும்; மயல் ஓங்கு இருங் களி யானை வரகுணன் வெற்பின் வைத்த கயல் - மயக்கத்தையுடைய உயர்ந்த பெரிய களியானையையுடைய வரகுணன் இமயத்தின்கண் வைத்த கயலெனக் கூட்டுக.

   
இன்று ஓராணையோலை அரையன்பொறியாகிய கயலையும் வில்லையுமுடைத்தாய் மன்னன் முனிவையுங்காட்டி வாராநின்றதெனச் சிலேடை வகையான் ஒருபொருடோன்றிய வாறறிக. மெய்ப்பாடு: அச்சம். பயன்: தேர்ப்பாகன் கேட்டுக் கடிதூர்தல்.

327