பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
540

23

வேந்தற் குற்றுளிப் பிரிவு

23.14 முகிலொடுகூறல்

   
முகிலொடுகூறல் என்பது காரோட்டங்கண்ட பாகன் அதனோடு விரையத் தேரோட்டாநிற்பான், பிரிதலால் திருந்திய வழகெல்லாம் அழிந்து துன்புறாநின்றவளது சீரிய நகரின்கண், வாராநின்ற வெனது தேரின்முற்பட்டுச் சென்றியங்காதொழிய வேண்டும்; இயங்கினும், அத்தமியாள்கேட்ப முழங்காதொழிய வேண்டுமெனத் தலைமகன், முந்துற்றுச் செல்லாநின்ற முகிலொடு கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-

329. அருந்தே ரழிந்தனம் ஆலமென்
        றோல மிடுமிமையோர்
    மருந்தே ரணியம் பலத்தோன்
        மலர்த்தாள் வணங்கலர்போல்

______________________________________________________________

செலலிறுதிக்கட் பெருந்தோண் முயங்குவலென்னுங் கருத்தாற் பிறப்பிற் றுனைந்து பெருகுக தேரென்றான். துன்னுமென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: உவகை. பயன்: கேட்ட பாகன் விரைந்து தேர் பண்ணுவானாதல்.

328

23.14.  முனைவற் குற்றுழி வினைமுற்றி வருவோன்
       கழும லெய்திச் செழுமுகிற் குரைத்தது.


   
இதன் பொருள்: ஆலம் அருந்து - நஞ்சையருந்த வேண்டும்; ஏர் அழிந்தனம் என்று ஓலம் இடும் இமையோர் மருந்து - இதனானழ கழிந்தோமென்று முறையிடுந்தேவர்க்கு அந்நஞ்சால் வரும் இடர்க்கு மருந்தாயவன்; ஏர் அணி அம்பலத்தோன் - அழகையுடைய அம்பலத்தின்கண்ணான்; மலர்த்தாள் வணங்கலர் போல் - அவனது மலர்போலுந்தாளை வணங்காதாரைப்போல; திருந்து ஏர் அழிந்து பழங்கண் தரும் - திருந்திய வழகெல்லாமழிந்து துன்பத்தை யுண்டாக்கும்; செல்வி சீர் நகர்க்கு - இல்வாழ்க்கைச் செல்வத்தை யுடையவளது அழகையுடைய வூரின்கண்; வளமுகிலே - வளமுகிலே; வரும் என் தேர் இதன்முன் வழங்கேல் - வாராநின்றவெனது தேரிதனின் முற்பட்டுச் சென்றியங்கா தொழிய வேண்டும்; முழங்கேல் - இயங்கினும் அத்தமியள் கேட்ப முழங்காதொழிய வேண்டும் எ-று.

    ஏரணியென்பதற்கு மிக்கவழகென்றும், பழங்கண்டருமென்