24
பொருள் வயிற்
பிரிவு
24.1 வாட்டங்கூறல்
வாட்டங்கூறல் என்பது பொருள்வயிற்
பிரியலுறாநின்ற தலைமகன், இருமையும் பொருளானே முற்றுப்பெறுமென்று யான் பொதுவகையாற்கூற, அக்குறிப்பறிந்து
கண்பனிவர, இத்தன்மையளாய் வாடினாள்; இனி யென்னாற் பிரிவுரைத்தலரிது; நீ யுணர்த்து மாற்றானுணர்த்தெனத்
தோழிக்குத் தலைமகளது வாட்டங் கூறா நிற்றல். அதற்குச் செய்யுள்-
332. முனிவரும் மன்னரும்
முன்னுவ
பொன்னான் முடியுமெனப்
பனிவருங் கண்பர மன்திருச்
சிற்றம் பலமனையாய்
துனிவரு நீர்மையி தென்னென்று
தூநீர் தெளித்தளிப்ப
நனிவரு நாளிது வோவென்று
வந்திக்கும் நன்னுதலே.
332
__________________________________________________
24.1. பிரிவு கேட்ட வரிவை
வாட்டம்
நீங்க லுற்றவன் பாங்கிக் குரைத்தது.
இதன் பொருள்: முனிவரும்
மன்னரும் முன்னுவ பொன்னான் முடியும் என - துறந்தாரு மரசரும் கருதுவனவாகிய மறுமையு மிம்மையும்
பொருளான் முற்றுப்பெறுமென்று பொது வகையாற் கூற, கண் பனி வரும்-அக்குறிப்பறிந்து கண்கள் பனிவாரா
நின்றன, இவ்வாறு, பனிவருங்கண்ணோடு அறிவழிந்து வருந்திய விடத்து; பரமன் திருச்சிற்றம்பலம்
அனையாய்-பரமனது திருச்சிற்றம்பலத்தை யொப்பாய்; துனி வரும் நீர்மை இது என் என்று தூ நீர் தெளித்து
அளிப்ப - நீ துன்பம் வருந்தன்மை இஃதென்ன காரணத்தான் வந்தது யான்பிரியேனென்று தூய நீரைத்
தெளித்துத் தலையளிசெய்ய அறிவு பெற்று அறிவழிந்த காலத்தைப் பிரிந்த காலமாகவே கருதி; நனி
வரும் நாள் இதுவோ என்று நன்னுதல் வந்திக்கும் - நீர் நனிதாழ்த்து வருநாளிதுவோவென்று நன்னுதலாள்
வணங்கி நின்றாள்; இனி நீயுணர்த்துமாற்றானுணர்த்து எ-று.
பரமன் றிருச்சிற்றம்பலமனையா
ளென்று பாடமோதுவாருமுளர். நீயெனவுந் தாழ்த்தெனவு மொருசொல் வருவித்துரைக்கப்
|