24
பொருள் வயிற்
பிரிவு
24.2 பிரிவுநினைவுரைத்தல்
பிரிவுநினைவுரைத்தல் என்பது வாட்டங்
கேட்ட தோழி, பொருளில்லாதார் இருமையின் கண்வரு மின்பமும் அறியாரெனவுட்கொண்டு,
அருஞ்சுரம்போய், நமர் பொருடேட நினையாநின்றா ரெனத் தலைமகளுக்குத் தலைமகனது பிரிவுநினை
வுரையாநிற்றல். அதற்குச் செய்யுள்-
333. வறியா ரிருமை யறியா
ரெனமன்னும் மாநிதிக்கு
நெறியா ரருஞ்சுரஞ் செல்லலுற்
றார்நமர் நீண்டிருவர்
அறியா வளவுநின் றோன் தில்லைச்
சிற்றம் பலமனைய
செறிவார் கருங்குழல் வெண்ணகைச்
செவ்வாய்த் திருநுதலே.
333
____________________________________________________________
பட்டது. நனிவந்திக்குமெனினுமமையும்.
துறந்தார் கருதுவதாகிய மறுமையின்பமும், அரசர் கருதுவதாகிய விம்மையின்பமு மென்று, நிரனிறையாகக்
கொண்டு, அவரிருவருங் கருதுவனவாகிய இப்பொருளிரண்டையும் பொருண்முடிக்குமென்று பொது வகையாற் கூறினானெனக்
கொள்க மெய்ப்பாடு: இளிவரலைச்சார்ந்த பெருமிதம். பயன்: பிரிவுணர்த்துதல்.
332
24.2. பொருள்வயிற் பிரியும்
பொருவே லவனெனச்
சுருளுறு குழலிக்குத் தோழி
சொல்லியது.
இதன் பொருள்: இருவர்
அறியா அளவு நீண்டு நின்றோன் தில்லைச் சிற்றம்பலம் அனைய - மாலும் பிரமனுமாகிய விருவர்
அடியும் முடியும் அறியாத எல்லையின்கண் நீண்டு நின்றவனது திருச்சிற்றம்பலத்தையொக்கும்; செறி
வார் கருங் குழல் வெண்ணகைச் செவ்வாய்த் திருநுதல் - செறிந்த நீண்டகரியகுழலினையும் வெள்ளிய
நகையினையுஞ் செய்யவாயினையுமுடைய திரு நுதால்; வறியார் - பொருளில்லாதார்; இருமை அறியார் என
- இம்மையு மறுமையுமாகிய இருமையின்கண்வரும் இன்பமு மறியா ரென்று கருதி; மன்னும் மா நிதிக்கு -
தொலையாது நிலைபெறும் பெரிய வரும் பொருடேடுதற்கு; நெறி ஆர் அரும் சுரம் நமர் செல்லல் உற்றார்-
|