பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
547

24

பொருள் வயிற் பிரிவு

24.3 ஆற்றாது புலம்பல்

   
ஆற்றாது புலம்பல் என்பது பிரிவுநினைவுரைப்பக்கேட்ட தலைமகள், இத்தோழியாகிய கொடியவள், இத்தன்மையை யறிந்திருந்தும், அன்பர் பிரிவரெனக் குவளைப்பூ வெறிதற்கு வாளுறைகழித்தாற்போலக் கூறினாள்; இதற்கியான் கூறுவதுண்டோ வென ஆற்றாது புலம்பாநிற்றல். அதற்குச் செய்யுள்-

334. சிறுவா ளுகிருற் றுறாமுன்னஞ்
        சின்னப் படுங்குவளைக்
    கெறிவாள் கழித்தனள் தோழி
        எழுதிற் கரப்பதற்கே
    அறிவாள் ஒழிகுவ தஞ்சனம்
        அம்பல வர்ப்பணியார்
    குறிவாழ் நெறிசெல்வ ரன்பரென்
        றம்ம கொடியவளே.

334

_______________________________________________________________

வழியறிதற்கரிய அருஞ்சுரத்தை நமர் போகலுற்றார் எ-று.

    செறியா ரென்பதூஉம் பாடம். சிறுகானெறி பலவாகிய வருஞ்சுர மெனினுமமையும். மெய்ப்பாடு: அழுகையைச் சார்ந்த பெருமிதம். பயன்: பிரிவுடம்படுத்தல்.

333

24.3.  பொருள்தரப் பிரியும் அருள்தரு பவனெனப்
      பாங்கி பகரப் பூங்கொடி புலம்பியது.


   
இதன் பொருள்: தோழி கொடியவள் - தோழியாகிய கொடியவள்; அஞ்சனம் எழுதிற் கரப்பதற்கே ஒழிகுவது அறிவாள் - அஞ்சன மெழுதின் எழுதுகின்ற கால மத்துணையுங் காதலர் தோன்றாமையான் அவ்வஞ்சனத்தை யொழிவதறிவாள்; அம்பலவர்ப் பணியார் குறி வாழ் நெறி அன்பர் செல்வர் என்று - அம்பலவரை வணங்காதார் அவ்வணங்காமைக்குக் குறியாக வாழுந் தீயநெறியை அன்பர் செல்வரென்று; வாள்சிறு உகிர் உற்று உறாமுன்னம் சின்னப்படும் குவளைக்கு - ஒளியையுடைய சிறியவுகிர் சிறிதுறாமுன்னம் பொடிபடுங் குவளைப் பூவிற்கு; எறிவாள் கழித்தனள் - எறிதற்குக் கருவியாகிய வாளையுறைகழித்தாள்; யான்கூறுவதுண்டோ! எ-று.