24
பொருள் வயிற்
பிரிவு
24.4 ஆற்றாமைகூறல்
ஆற்றாமைகூறல் என்பது தலைமகளது
வருத்தங்கண்ட தோழி, காதலர் கானகத்தையுடைய சுரத்தைப் போய்ப் பொருடேட நினையாநின்றாரென்றுயான்
சொல்லுமளவில், அவளது முலையுங் கண்ணும் பொன்னும் முத்துந் தாராநின்றன; இனி நீ சேட்சென்று தேடும்
பொருள் யாதோவெனத் தோழி தலைமகனுக்கு அவளது பிரிவாற்றாமை கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
335. வானக்கடிமதில் தில்லையெங்
கூத்தனை ஏத்தலர்
போற்
கானக் கடஞ்செல்வர் காதல
ரென்னக் கதிர்முலைகள்
மானக் கனகந் தருமலர்க்
கண்கள்முத் தம்வளர்க்குந்
தேனக்க தார்மன்ன னென்னோ
இனிச்சென்று தேர்பொருளே.
335
கொடியவரே யென்பது பாடமாயிற்
கொடியராகிய வன்பரெனக் கூட்டுக. அம்ம: அசைநிலை. மெய்ப்பாடு: அழுகை. பயன்: செல வழுங்குவித்தல்.
334
24.4. ஏழை யழுங்கத்
தோழி சொல்லியது.
இதன் பொருள்: வானக் கடி
மதில் தில்லை எம் கூத்தனை ஏத்தலர் போல் - முகில்களையுடைத்தாகிய காவலையுடைய மதிலாற் சூழப்பட்ட
தில்லையில் எங்கூத்தனை வாழ்த்தாதார் போல; காதலர் கானக் கடம் செல்வர் என்ன - காதலர்
கானகத்தையுடைய சுரத்தைச் செல்வரென்று சொல்ல; கதிர் முலைகள் மானக் கனகம் தரும் - ஒளியையுடைய
முலைகள் கொண்டாடப்படும் பொன்னைத்தாராநின்றன; மலர்க் கண்கள் முத்தம் வளர்க்கும் - மலர்
போன்ற கண்கள் முத்தத்தைப் பெருக உண்டாக்கா நின்றன; அதனான், தேன் நக்க தார் மன்னன் -
தேனோடு மலர்ந்த தாரையுடைய மன்னன்; இனிச் சென்றுதேர் பொருள் என் - இனிச் சேட்சென்று தேடும்
பொருள் யாது! எ-று.
மானமென்றது அளவை.
அளவையென்றது பிரமாணம். மாற்றாணிப்பொன்னென்றுரைப்பினு மமையும். மன்னனென்பது
|