24
பொருள் வயிற்
பிரிவு
24.11 நெஞ்சொடு நோதல்
நெஞ்சொடு நோதல் என்பது மீள நினைந்த
தலைமகன், பின்னும் பொருண்மேற் செல்லாநின்ற வுள்ளத்தனாய் நின்று மீளமாட்டாது, இவ்விரண்டனுள்
இப்பொழுது நீயேதுக்குப்போக முயல்கின்றாயெனத் தன்னெஞ்சொடு நொந்து கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
342. பொன்னணி யீட்டிய ஓட்டரும்
நெஞ்சமிப் பொங்குவெங்கா
னின்னணி நிற்குமி தென்னென்ப
தேஇமை யோரிறைஞ்சும்
மன்னணி தில்லை வளநக
ரன்ன அன் னந்நடையாள்
மின்னணி நுண்ணிடைக்
கோபொருட்
கோநீ விரைகின்றதே.
342
_________________________________________________
24.11. வல்லழற் கடத்து மெல்லியலை
நினைந்து
வெஞ்சுடர் வேலோன் நெஞ்சொடு
நொந்தது.
இதன் பொருள்: பொன் அணி
ஈட்டிய ஓட்டரும் நெஞ்சம் - பொற்றிரளை யீட்டுவா னோட்டந்தருநெஞ்சமே; நீ விரைகின்றது -இப்பொழுது
நீ விரைகின்றது; இமையோர் இறைஞ்சும் மன் அணி தில்லை வளநகர் அன்ன - இமையோர் சென்று வணங்கும்
மன்னனது அழகிய தில்லையாகிய வளநகரையொக்கும்; அன்ன நடையாள் மின் அணி நுண் இடைக்கோ - அன்னத்தினடை
போலு நடையை யுடையாளது மின் போலும் நுண்ணிய விடைக்கோ; பொருட்கோ - எடுத்துக்கொண்ட
பொருட்கோ, இரண்டற்குமல்லவோ; இப்பொங்கு வெங்கானின் நணி நிற்குமிது என் என்பது - இவ்வழல்
பொங்கு வெங்கானத்தைச் சேர்ந்து போவதும் மீள்வதுஞ் செய்யாது நிற்கின்ற விஃதியாதென்று
சொல்லப்படுவது? எ-று.
நண்ணியென்பது நணியென
விடைக்குறைந்து நின்றது. அணியென்று பிரித்து வெங்கானின்கணணித்தாக நிற்பதென்றுரைப் பினுமமையும்.
இமையோரிறைஞ்சுந் தில்லைவளநகரெனவியையும்.
342
|