24
பொருள் வயிற்
பிரிவு
24.12 நெஞ்சொடு புலத்தல்
நெஞ்சொடு புலத்தல் என்பது நெஞ்சொடு
நொந்து கூறாநின்றவன், பேயிடத்துஞ்செய்தலரிதாம்பிரிவை இவளிடத்தே யெளிதாக்குவித்துச் சேய்த்தாகிய
இவ்விடத்துப் போந்த நினது சிக்கனவு அஞ்சத்தக்கதெனப் பின்னும் அந்நெஞ்சொடு புலந்து கூறாநிற்றல்.
அதற்குச் செய்யுள்-
343. நாய்வயி னுள்ள குணமுமில்
லேனைநற் றொண்டுகொண்ட
தீவயின் மேனியன் சிற்றம்
பலமன்ன சின்மொழியைப்
பேய்வயி னும்மரி தாகும்
பிரிவெளி தாக்குவித்துச்
சேய்வயிற் போந்தநெஞ் சேயஞ்சத்
தக்க துன் சிக்கனவே.
343
_________________________________________________
24.12. அழற்கடத் தழுக்கமிக்கு
நிழற்கதிர்வேலோன் நீடுவாடியது.
இதன் பொருள்: நாய் வயின்
உள்ள குணமும் இல்லேனை நல் தொண்டு கொண்ட - நாயினிடத்துள்ள நன்மையுமில்லாத வென்னை நல்ல தொண்டாகக்கொண்ட;
தீவயின் மேனியன் சிற்றம்பலம் அன்னசில் மொழியை - தீயிடத்து நிறம்போலு நிறத்தை யுடையவனது
சிற்றம்பலத்தையொக்குஞ் சிலவாகிய மொழியை யுடையாளிடத்து; பேய் வயினும் அரிதாகும் பிரிவு எளிதாக்குவித்து;
பேயினிடத்துஞ் செய்தலரிதாம் பிரிவை எளிதாக்குவித்து-சேய் வயின் போந்த நெஞ்சே - சேய்த்தாகிய
இவ்விடத்துப் போந்த நெஞ்சமே; உன் சிக்கனவு அஞ்சத்தக்கது - உனது திண்ணனவு அஞ்சத்தக்கது
எ-று.
நற்றொண்டென்புழி நன்மை: சாதியடை.
சின்மொழியை யென்னு மிரண்டாவது ஏழாவதன்பொருட்கண் வந்தது.
343
|