24
பொருள் வயிற்
பிரிவு
24.13 நெஞ்சொடு மறுத்தல்
நெஞ்சொடு மறுத்தல் என்பது நெஞ்சொடு
புலந்து கூறிப் பின்னும் பொருண்மேற் செல்லாநின்ற வுள்ளத்தோடு தலைமகளை நினைந்து, இத்தன்மைத்தாகிய
பொன்னைவிட்டு வேறு பொன்றேடியோ எம்மை வாழச்செய்வது? இதற்கியாமுடம்படேம்; நாமே நடக்கவெனச்
செலவுடம்படாது பொருள் வலித்த நெஞ்சொடு மறுத்துக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
344. தீமே வியநிருத் தன்திருச்
சிற்றம் பலம்அனைய
பூமே வியபொன்னை விட்டுப்பொன்
தேடியிப் பொங்குவெங்கான்
நாமே நடக்க வொழிந்தனம்
யாம்நெஞ்சம் வஞ்சியன்ன
வாமே கலையைவிட் டோபொருள்
தேர்ந்தெம்மை
வாழ்விப்பதே.
344
_________________________________________________
24.13. நீணெறி சென்ற நாறிணர்த்
தாரோன்
சேணெறி யஞ்சி மீணெறி சென்றது.
இதன் பொருள்: நெஞ்சம்
- நெஞ்சமே; தீ மேவிய நிருத்தன் திருச்சிற்றம்பலம் அனைய - தீயைப்பொருந்திய நிருத்தத்தை
யுடையவனது திருச் சிற்றம்பலத்தை யொக்கும்; பூ மேவிய பொன்னை விட்டுப் பொன் தேடி - பூவின்கண்மேவிய
பொன்னை விட்டு வேறு பொன்னைத் தேடாநின்று; இப் பொங்கு வெங்கான் நாமே நடக்க - இவ்வழல்பொங்கும்
வெங்கானின் நாமே நடப்பீராமின்; யாம் ஒழிந்தனம் - யாமொழிந்தேம்; பொருள் தேர்ந்து எம்மை
வாழ்விப்பது - பொருடேடி யெம்மை வாழச் செய்வது; வஞ்சி அன்ன வாம் மேகலையை விட்டோ - வஞ்சியையொக்கு
மழகிய மேகலையையுடையாளை விட்டோ? யாமிதற்குடம்படேம் எ-று.
இதுவும் பெருந்திணைப்பாற்படும்.
மீளநினைந்த துணையல்லது மீண்டிலனென்பார் மீணெறியை யுள்ளத்தாற் சென்ற தென்றுரைப்ப. இப்பாட்டு
நான்கிற்கும் மெய்ப்பாடு: அச்சம். பயன்: செலவழுங்குவித்தல்.
344
|