24
பொருள் வயிற்
பிரிவு
24.14 நாளெண்ணிவருந்தல்
நாளெண்ணி வருந்தல் என்பது
தலைமகனது வரவுநீட்ட நினைந்து வருந்தாநின்ற தலைமகளது வருத்தங்கண்ட தோழி, இவளை நோய்பொருந்தச்
சென்றவர் சென்றநாளை எண்ணுந் தன்மையாற் பலகாலிடுதலின் நிலனுங்குழிந்து விரலுந்தேய்ந்ததென,
அவன் சென்றநாளெண்ணி வருந்தாநிற்றல். அதற்குச் செய்யுள்-
345. தெண்ணீ ரணிசிவன்
சிற்றம்
பலஞ்சிந்தி யாதவரிற்
பண்ணீர் மொழியிவ
ளைப்பையுள்
எய்தப் பனித்தடங்க
ணுண்ணீர் உகவொளி வாடிட
நீடுசென் றார்சென்றநாள்
எண்ணீர் மையின்நில னுங்குழி
யும்விர லிட்டறவே.
345
_____________________________________________________________
24.14. சென்றவர் திறத்து நின்றுநனி
வாடுஞ்
சூழிருங் கூந்தற்குத் தோழிநனி
வாடியது.
இதன் பொருள்: தெள் நீர்
அணி சிவன் சிற்றம்பலம் சிந்தியாதவரின்-தெண்ணீரைச் சூடிய சிவனது சிற்றம்பலத்தைச் சிந்தியாதவரைப்போல
வருந்த; பண் நீர் மொழி இவளைப் பையுள் எய்த - பண்ணீர்மையையுடைய மொழியையுடையவிவளை நோய்
பொருந்த; பனித் தடங் கண்ணுள் நீர் உக-குளிர்ச்சியையுடைய பெரியகண்ணகத்து நீர்வார; ஒளி
வாடிட-மேனியொளிவாட; நீடு சென்றார் சென்ற நாள் - காலநீடப் பிரிந்தவர் பிரிந்தநாளை; எண்
நீர்மையின் இட்டு விரல் அற நிலனும் குழியும்-எண்ணுந்தன்மையாற் பலகாலிடுதலின் விரல்தேய நிலனுங்குழியும்!
இனியெங்ஙன மாற்றும்! எ-று.
ஒளிவாடினளென்பது பாடமாயின்,
விரலிட்டென்பதனைத் தோழிமேலேற்றுக. மெய்ப்பாடு: அழுகை. பயன்: தலைமகளை யாற்றுவித்தல்.
345
|