24
பொருள் வயிற்
பிரிவு
24.15
ஏறுவரவுகண்டிரங்கியுரைத்தல்
ஏறுவரவுகண்டிரங்கியுரைத்தல் என்பது
பொருண்முற்றி மீளலுறாநின்ற தலைமகன், மாலைக்காலத்து நாகொடுவாரா நின்ற ஏறுவரவுகண்டு, இச்சிறந்த
செக்கர்மாலை அவள் பொறுக்குமளவன் றென இரங்கிக் கூறாநிற்றல். அதற்குச் செய்யுள்-
346. சுற்றம்
பலமின்மை காட்டித்தன்
தொல்கழல் தந்ததொல்லோன்
சிற்றம் பலமனை யாள்பர
மன்றுதிண் கோட்டின்வண்ணப்
புற்றங் குதர்ந்துநன் னாகொடும்
பொன்னார் மணிபுலம்பக்
கொற்றம் மருவுகொல் லேறுசெல்
லாநின்ற கூர்ஞ்செக்கரே.
346
_____________________________________________________________
24.15.
நீடியபொன்னின் நெஞ்சம்நெகிழ்ந்து
வாடியவன் வரவுற்றது.
இதன் பொருள்: திண் கோட்டின்
வண்ணப் புற்று உதர்ந்து - திண்ணிய கோட்டான் நிறத்தையுடைய புற்றையிடந்து; பொன் ஆர் மணி
புலம்ப-இரும்பார்ந்த மணியொலிப்ப; கொற்றம் மருவு கொல் ஏறு - வெற்றியைப் பொருந்தின கொலல்வல்ல
ஆனேறு; நல் நாகொடும் செல்லாநின்ற - நல்ல நாகோடும் ஊர்வயிற் செல்லா நின்ற; கூர்ஞ் செக்கர்
- சிறக்குஞ் செக்கர்வானையுடைய மாலை; சுற்றம் பலம் இன்மை காட்டி - சுற்றத்தாற் பயனின்மையையறிவித்து;
தன் தொல் கழல் தந்த தொல்லோன் சிற்றம்பலம் அனையாள் பரம் அன்று - பிறவிமருந்தாதற்குப்
பழையவாய் வருகின்ற தன்கழல்களை யெனக்குத் தந்த பழையோனது சிற்றம்பலத்தை யொப்பாளதளவன்று;
இனியென்னாகுவள்! எ-று.
சுற்றம் பயனையுடைத்தன்மையெனினு
மமையும். மண்ணப் புற்றென்பதூஉம் பாடம். நேடியபொன்னி னென்பது பாடமாயின், நேடுதல்-தேடுதல்.
மெய்ப்பாடு: அச்சம். பயன்: தேர்ப்பாகன் மீள்வதற்குகொருப் படுதல்.
346
|