பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
561

24

பொருள் வயிற் பிரிவு

24.16 பருவங்கண்டிரங்கல்

   
பருவங்கண்டிரங்கல் என்பது ஏறுவரவுகண் டிரக்கமுற்று வாராநின்ற தலைமகன், இம்முகில்கள் ஒன்றோடொன்று தம்மில் விரவுதலாற் பொழில்கடோறும் மயில்கள் திரண்டாடாநின்ற இக்கார்காலத்து, அவளென்னை நினைந்தாற்றாளாங் கொல்லோவென அப்பருவங்கண் டிரங்காநிற்றல். அதற்குச் செய்யுள்-

347. கண்ணுழை யாதுவிண் மேகங்
        கலந்து கணமயில்தொக்
    கெண்ணுழை யாத்தழை கோலிநின்
        றாலு மினமலர்வாய்
    மண்ணுழை யாவும் அறிதில்லை
        மன்னன தின்னருள்போற்
    பண்ணுழை யாமொழி யாளென்ன
        ளாங்கொல்மன் பாவியற்கே.

347

______________________________________________________________

24.16.  மன்னிய பருவ முன்னிய செலவின்
      இன்ன லெய்தி மன்னனே கியது.

   
இதன் பொருள்: விண் மேகம் கலந்து கண் நுழையாது - விண்ணிடத்து முகில்கள் ஒன்றோடொன்று விரவுதலாற் கண் சென்று நுழையமாட்டாது; இன மலர் வாய் - இனமலரையுடைய விட மெங்கும்; கண மயில் தொக்கு எண் நுழையாத்தழை கோலி நின்று ஆலும் - மயிலினங்கள் திரண்டு எண் சென்றுபுகாத பீலியை விரித்து நின்றாடாநிற்கும்; மண் உழையாவும் அறி தில்லை மன்னனது இன் அருள் போல் - மண்ணிடத்தெல்லாவுயிர்களுமறியுந் தில்லையின் மன்னனது இனியவருள் போலும்; பண் நுழையா மொழியாள் பாவியற்கு என்னள் ஆம் கொல் - பண்ணணையாத தேமொழியையுடையாள் தீவினையேற்கு எத்தன்மையளாமோ! அறிகின்றிலேன்! எ-று.

   
எண்ணென்பது உணவாகிய வெண்ணென்பாருமுளர். பண்ணுழையாமொழி யென்பதற்குப் பண்ணப்பட்ட வுழையாகிய நரம்புபோலும் மொழியாளெனினுமமையும். மன்: அசைநிலை. மன்னிய பருவ முன்னிய செலவின் இன்னலெய்தி - நிலைபெற்ற பருவத்து முற்பட்ட செலவினான் வருத்தமெய்தி. மெய்ப்பாடும், பயனும் அவை.

347