பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
564

24

பொருள் வயிற் பிரிவு

24.19 இளையரெதிர் கோடல்

   
இளையரெதிர்கோடல் என்பது தோழி தலைமகட்குத் தேர்வரவு கூறாநிற்ப, இந்நிலைமைக்கண், இவளாவிசெல்வதற்கு முன்னே, சூழுந்தொகுநிதியோடு அன்பர் தேர்வந்து தோன்றிற்று; இனி யூழின்வலியது வேறொன்றுமில்லையெனப் பொருண் முடித்து வாராநின்ற தலைமகனைச் சென்று இளையர் எதிர் கொள்ளாநிற்றல். அதற்குச் செய்யுள்-

360. யாழின் மொழிமங்கை பங்கன்சிற்
        றம்பலத் தானமைத்த
    ஊழின் வலியதொன் றென்னை
        ஒளிமே கலையுகளும்
    வீழும் வரிவளை மெல்லியல்
        ஆவிசெல் லாதமுன்னே
    சூழுந் தொகுநிதி யோடன்பர்
        தேர்வந்து தோன்றியதே.

350

_____________________________________________________________

அற்றம் பார்த்து வெல்லக்கருதிச் சிலர் வெகுள்கின்ற காலத்து அத்தமியார்க்குத் துணையாயதொருதேர்வந்து காத்ததென வேறுமொரு பொருள் விளங்கினவாறறிக. அருளின் மேவினதென வியையும். அருளான்வந்து மேவிற்றெனினுமமையும். மெய்ப்பாடு: பெருமிதம். பயன்: ஆற்றுவித்தல்.

349

24.19.  செறிக ழலவன் திருநகர் புகுதர
      எறிவேல் இளைஞர் எதிர் கொண்டது.

   
இதன் பொருள்: ஒளி மேகலை உகளும் - ஒளியையுடைய மேகலை தன்னிலையினின்றும் போகாநின்றது; வரி வளை வீழும் - வரியையுடைய வளைகள் கழன்று வீழாநின்றன; மெல்லியல் ஆவி செல்லாத முன்னே -இந்நிலைமைக்கண் மெல்லிய லுயிர் செல்வதற்கு முன்னே; சூழும் தொகு நிதியோடு அன்பர் தேர் வந்து தோன்றியது - சூழ்ந்துவருந் திரண்டநிதியோடு அன்பரது தேர் வந்து தோன்றிற்று, அதனான், யாழின் மொழி மங்கை பங்கன் - யாழோசைபோலு மினிய மொழியையுடைய மங்கையது கூற்றை யுடையான்; சிற்றம்பலத்தான் - சிற்றம்பலத்தின்கண்ணான்; அமைத்த ஊழின் வலியது ஒன்று