25
பரத்தையிற்
பிரிவு
25.4 கனவிழந்துரைத்தல்
கனவிழந்துரைத்தல் என்பது தலைமகனது
கொடுமை நினைந்து கிடந்து வாடாநின்ற தலைமகள், கனவிடைவந்து அவன் மார்புதரத்தானதனை நனவென்று
மயங்கிப் புலந்து அவனோடு புணராதிழந்தமையைத் தோழிக்குச் சொல்லாநிற்றல். அதற்குச் செய்யுள்-
355. தேவா சுரரிறைஞ் சுங்கழ
லோன்தில்லை சேரலர்போல்
ஆவா கனவும் இழந்தேன்
நனவென் றமளியின்மேற்
பூவார் அகலம்வந் தூரன்
தரப்புலம் பாய்நலம்பாய்
பாவாய் தழுவிற் றிலேன்விழித்
தேனரும் பாவியனே.
355
__________________________________________________________
யாரோவெனப் பரத்தையர்க்கிரங்குவாள்போன்று,
தலைமகனது கொடுமை கூறினாளாகவுரைக்க. தில்லை யுறாதவருறு நோயென்பது பாட மாயின், எழினலமூரன்கவரத்
தில்லையையுறாத அத்தீவினை யாருறு நோயையொத்தென்றுரைக்க. ஊரனோடிருந்து வாடியது - ஊரன் குறைகளை
நினைந்து அதனோடிருந்து வாடியது. மெய்ப்பாடு: அழுகை. பயன்: ஆற்றாமை நீங்குதல்.
354
25.4. சினவிற் றடக்கைத்
தீம்புன லூரனைக்
கனவிற் கண்ட காரிகை யுரைத்தது.
இதன் பொருள்: நலம்
பாய் பாவாய் - நலம் பரந்த பாவாய்; அமளியின் மேல் பூ ஆர் அகலம் வந்து ஊரன் தர - அமளியின்
கண்மாலையையுடைய மார்பை ஊரன்வந்துதர; புலம்பாய் - அவனோடு மேவாமையிற் பின்னுந்தனிமையாய்;
நனவு என்று தழுவிற்றிலேன் -நனவென்று மயங்கித் தவறுநினைந்து புல்லிற்றிலேன்; அரும் பாவியேன்
விழித்தேன் - அத்துணையேயன்றிப் பொறுத்தற்கரிய தீவினையையுடையேன் விழிப்பதுஞ் செய்தேன்,
அதனால், தேவாசுரர் இறைஞ்சும் கழலோன் தில்லை சேரலர் போல் - தேவருமசுரரு மிறைஞ்சுங்
கழலையுடையவனது தில்லையைச் சேராதாரைப்போல; ஆவா கனவும் இழந்தேன் -ஐயோ! கனவான்
|