பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
576

பரத்தையிற் பிரிவு

    தீங்கு வளைத்தவில் லோன்தில்லைச்
        சிற்றம் பலத்தயல்வாய்
    ஓங்கு வளைக்கரத் தார்க்கடுத்
        தோமன் உறாவரையே.

357

25.7 பள்ளியிடத்தூடல்

   
பள்ளியிடத்தூடல் என்பது வாயின்மறுத்த தலைமகள், ஆற்றாமையே, வாயிலாகப் புக்குப் பள்ளியிடத்தானாகிய, தலைமகனோடு, நின்னை யிடைவிடாது நுகர்தற்கு முற்காலத்துத் தவத்தைச் செய்யாத தீவினையேமை நோவாது, இன்றிவ்வாறாகிய நின்னை நோவதென்னோ? அதுகிடக்க, நின்காதலிமார் புறமே கற்று நினக்குப் புதிதாகச் செய்த அப்புல்லுதலை யாஞ்செய்ய மாட்டேம்; அதனாலெம்மைத் தொடாதே; எங்கலையை விடுவாயாக வெனக் கலவி கருதிப் புலவாநிற்றல். அதற்குச் செய்யுள்-

358. தவஞ்செய் திலாதவெந் தீவினை
        யேம்புன்மைத் தன்மைக்கெள்ளா
    தெவஞ்செய்து நின்றினி யின்றுனை
        நோவதென் அத்தன்முத்தன்

_____________________________________________________________

யுடையார்க்கு; மன் உறாவரை அடுத்தோம் - மன்னனை உறாவரையாகக் கொடுத்தோம் எ-று.

    உறாவரை - முற்றூட்டு, தீங்குவளைத்த வில்லோ னென்பதற்குத் தீங்கெய்தவென ஒருசொல் வருவியாது அரணத்தைத் தீங்கு வளைத்தற்குக் காரணமாகிய வில்லென்றுரைப்பினுமமையும். ஓங்கு வளைக்கரத்தாரென்புழி ஓங்குதலை வளைக்கரத்தார் மேலேற்றுக. விலையானுயர்ந்தவளை யெனினுமமையும். அடுத்தோ மென்றதனால், தனதுரிமை கூறினாளாம். மன்: அசைநிலையாக்கி, மாலையையுந் தோளையு மடுத்தோ மெனினுமமையும். மெய்ப்பாடும், பயனும் அவையே.

357

25.7.  பீடிவர் கற்பிற் றோடிவர் கோதை
     ஆடவன் றன்னோ டூடி யுரைத்தது.


   
இதன் பொருள்: அத்தன் - உலகத்துள்ளாரெல்லார்க்குந் தந்தை;