சுவலங
பரத்தையிற்
பிரிவு
சுவலங் கிருந்தநந் தோன்றல்
துணையெனத் தோன்றுதலால்
அவலங் களைந்து பணிசெயற்
பாலை யரசனுக்கே.
389
25.39 அணைந்தவழியூடல்
அணைந்தவழியூடல் என்பது தோழியாலூடல்
தணிவிக்கப் பட்டுப் பள்ளியிடத்தாளாகிய தலைமகள், நீ செய்கின்ற விதனை யறியின் நின் காதலிமார்
நின்னைவெகுள்வர்; அதுகிடக்க, யாம் மேனி முழுதுஞ் சிறுவனாலுண்டாக்கப்பட்ட பால்புலப்படுந் தன்மையை
யுடையேம்; அதன்மேல் யாமும் நீ செய்கின்றவிக் கள்ளத்தை விரும்பேம்; அதனால் எங்காலைத் தொடாதொழி;
எங்கையை விடுவாயாக எனத் தலைமகன் றன்னையணைந்தவழி ஊடாநிற்றல். அதற்குச் செய்யுள்-
390. சேறான் திகழ்வயற்
சிற்றம்
பலவர்தில் லைநகர்வாய்
வேறான் திகழ்கண் இளையார்
வெகுள்வர்மெய்ப் பாலன்செய்த
_____________________________________________________________
காட்டிடைஆட்டு உவந்த - புறங்காட்டின்கண்
ஆடுதலை விரும்பிய - தவல் அங்கு இலாச் சிவன் தில்லை அன்னாய் - கேடங்கில்லாத சிவனது தில்லையையொப்பாய்
- தழுவி முழுவி சுவல் அங்கு இருந்த - தழுவி முத்தங்கொண்டு சுவலிடத்தேறியிருந்த - நம் தோன்றல்
துணை எனத் தோன்றுதலால் - நம்முடைய தோன்றலைத் தமக்குத் துணையெனக்கருதி வந்து தோன்றுதலான்
- அவலம் களைந்து அரசனுக்குப் பணி செயற்பாலை - நினதுள்ளத்துக் கவற்சியைநீக்கி இனியரசற்குக்
குற்றேவல் செயற்பாலை எ-று.
தழுவிமுழுவித்தோன்றுதலாலென
வியையும். சுவற்கணங்கிருந்த வெனினு மமையும். மெய்ப்பாடு :
பெருமிதம். பயன்: தலைமகளைச் சிவப்பாற்றுவித்தல்.
389
25.39. தெளிபுன லூரன் சென்றணைந்
தவழி
ஒளிமதி நுதலி யூடி யுரைத்தது.
இதன் பொருள்: சேல்
திகழ் வயல் - சேல்விளங்கும் வயலை
|