பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
615

பரத்தையிற் பிரிவு

    பாறான் திகழும் பரிசினம்
        மேவும் படிறுவவேங்
    காறான் தொடல்தொட ரேல்விடு
        தீண்டலெங் கைத்தலமே.

390

______________________________________________________________

யுடைய; சிற்றம்பலவர் தில்லை நகர்வாய் வேல் திகழ் கண் இளையார்-சிற்றம்பலவரது தில்லைநகரிடத்துளராகிய வேல் போலுங் கண்ணையுடைய நின்காதலிமாராகிய விளையவர்; வெகுள்வர் - நீ செய்கின்ற விதனை யறியின் நின்னை வெகுள்வர். அதுவேயுமன்றி, மெய் பாலன் செய்த பால் திகழும் பரிசினம் - மேனி சிறுவனாலுண்டாக்கப்பட்ட பால்புலப்படுந் தன்மையையுடையே மாதலின் நினக்குத் தகேம்; மேவும் படிறு உவவேம்-இதன் மேலே யாமும் நீயும் மேவுநாணின்மையோடு கூடிய கள்ளத்தை விரும்பேம்; கால் தொடல் - அதனால் எங்காலைத் தொடா தொழி; தொடரேல் - எம்மைத் தொடரவேண்டா; எம் கைத்தலம் தீண்டல் - எங்கைத் தலத்தைத் தீண்டற்பாலையல்லை; விடு - விடுவாயாக எ-று.

    திகழ்வயற்றில்லையெனவியையும். பால் திகழுமென்னும் இடத்து நிகழ் பொருளின்வினை மெய்யாகிய விடத்துமேலேறி நின்றது. நான்கிடத்தும் தானென்பது அசைநிலை. பரிசினமேனுமென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு; வெகுளி. பயன்: ஊடனீங்குதல்.

390