பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
618

நன

பரத்தையிற் பிரிவு

    நன்றுஞ் சிறியவ ரில்லெம
        தில்லம்நல் லூரமன்னோ
    இன்றுன் திருவரு ளித்துணை
        சாலுமன் னெங்களுக்கே.

392

25.42 மிகுத்துரைத்தூடல்

   
மிகுத்துரைத்தூடல் என்பது கலவிகருதிப் புலவாநின்ற தலைமகள், புணர்தலுறாநின்ற தலைமகனுடன் நீர் விழுமிய நாட்டு விழுமியநல்லூர் விழுமியகுடியிலுள்ளீர்; எம்போல் வாரிடத்து இவ்வாறு புணர்தல் விரும்புதல் நுமக்கு விழுமிய வல்லவென மிகுத்துரைத்தூடா நிற்றல். அதற்குச் செய்யுள்-

393. செழுமிய மாளிகைச் சிற்றம்
        பலவர்சென் றன்பர்சிந்தைக்
    கழுமிய கூத்தர் கடிபொழி
        லேழினும் வாழியரோ

____________________________________________________________

செய்ய வேண்டுவ துண்டோ? எ-று.

    மன்னும் ஓவும்: அசை நிலை. சாலுமன்னென்புழி மன்னும் அசைநிலைபோலும். மெய்ப்பாடு: வெகுளி. பயன்: புலத்தல்; புலவி நீங்கியதூஉமாம்.

25.42.  நாடும் ஊரும் இல்லுஞ் சுட்டி
      ஆடற் பூங்கொடி யூடி யுரைத்தது.


   
இதன் பொருள்: செழுமிய மாளிகைச் சிற்றம்பலவர் - வளவிய மாளிகைகளாற் குழப்பட்ட சிற்றம்பலத்தையுடையார்; அன்பர் சிந்தைச் சென்று கழுமிய கூத்தர் - அன்பர் சிந்தைக்கட் சென்று பொருந்திய கூத்தர்; கடி பொழில் ஏழினும் - அவரது காவலையுடைய வுலகமேழினுள்ளும்; விழுமிய நாட்டு விழுமிய நல்லூர் விழுக்குடியீர் - சிறந்தநாட்டின்கட் சிறந்தநல்லவூரிற் சிறந்தகுடியிலுள்ளீர்; இன்னவாறு விரும்புவது விழுமிய அல்ல கொல்லோ-எம்போல் வாரிடத்து இத்தன்மையவாகிய நெறியை விரும்புதல் உமக்குச் சிறந்தனவல்லபோலும் எ-று.

    வாழியும் அரோவும்: அசைநிலை. விரும்புவ தென்புழி,