பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
621

புயன

பரத்தையிற் பிரிவு

    புயன்மன்னு குன்றிற் பொருவேல்
        துணையாப்பொம் மென்இருள்வாய்
    அயன்மன்னும் யானை துரந்தரி
        தேரும் அதரகத்தே.

395

______________________________________________________________

கழல் சிற்றம்பலவர் தென்னம் பொதியில் - இமையோரிறைஞ்சும் நுண் செயல்தங்கிய நல்ல வீரக்கழலணிந்த திருவடியையுடைய சிற்றம்பலவரது தெற்கின்கணுளதாகிய பொதியிலிடத்து; புயல் மன்னு குன்றில் பொம்மென் இருள்வாய் - புயறங்கிய இக்குன்றிற்செறிந்த விருளின்கண்ணே; அயல் மன்னும் யானை துரந்து - பக்கத்துத்தங்கும் யானைகளையோட்டி; அரி தேரும் அதரகத்து - அரிமா அவைபுக்க விடந்தேடும் வழியகத்து; பொருவேல் துணையா - தமது பொருவேலே துணையாக வந்து; இயல் மன்னும் அன்பு தந்தார்க்கு - இயல்பாகிய நிலை பெற்றவன்பை நமக்குத் தந்தவர்க்கு; நிலை என் - யானிவ்வாறுடம்படாது நிற்குநிலை என்னாம்! இது தகாது எ-று.

    பெயரெச்சத்திற்கும் பெயர்க்கும் ஒருசொன்னீர்மைப் பாடுண்மையின், இயன்மன்னுமன்பெனத் தொக்கவாறறிக. இயல்பைப் பொருந்தியவன்பெனினு மமையும். அதரகத்து வந்தென வொருசொல் வருவித்துரைக்கப்பட்டது. புயன்மன்னு குன்றிலன்பு தந்தார்க்கெனக் கூட்டுக.

    தகுதியின் - தகுதியான். மிகுபதம் - ஆற்றாமை மிக்க வளவு. தகுதியி லூரனெனப் பாடமாயின், தகுதியில்லாத மிகுபத மென்க. மெய்ப்பாடு: அச்சம். பயன்: சிவப்பாற்றுதல்.

395