பக்கம் எண் :

மாணிக்கவாசக சுவாமிகள்-திருக்கோவையார்(எட்டாம் திருமுறை)
625

பரத்தையிற் பிரிவு

    நீறூர் கொடுநெறி சென்றிச்
        செறிமென் முலைநெருங்கச்
    சீறூர் மரையத ளிற்றங்கு
        கங்குற் சிறிதுயிலே.

398

______________________________________________________________

வெதுப்பு நீறு ஊர் கொடு நெறி சென்று - ஞாயிற்றினுடைய வளவிய கதிர்கள் வெதுப்பிய நீறுபரந்த கொடியநெறியைச் சென்று; இச் செறிமென்முலை நெருங்க - இச்செறிந்த மெல்லிய முலைகள் எம்முடைய மார்பினிடை வந்தடர; சீறூர் மரை அதளின் தங்கு கங்குல் சிறுதுயில் மாறு கண்டிலம் - நெறியாற் சிறிய வூரின்கண் மரையதட் பள்ளியிற்றங்கிய இரவிற் சிறிய துயிற்குமாறு கண்டிலம்; அதனை நீ யுள்ளியுமறிதியோ? எ-று.

    அண்டரதண்டமுழுதும் பெறுதலால் வருமின்பமும் அத்துயிலான்வந்த வின்பத்திற்கு மாறில்லையென்ற வாறு. இளவேறு - புதல்வன். தமக்குத்தக்க பள்ளியுமிடமு மின்மையிற் சிறுதுயிலென்றான். துயிலும்பொழுதிற்றுயிலாப் பொழுது பெரிதாகலின் அவ்வாறு கூறினானெனினுமமையும். துயிற்கென்னு நான்கனுருபு விகாரவகை யாற்றொக்கு நின்றது. முன்னிகழ்ந்தது கூறுவானாய் உண்ணின்ற சிவப்பாற்று வித்தது. ஞெமுங்க வென்பதூஉம், மரவத ளென்பதூஉம் பாடம். மெய்ப்பாடு: உவகை.