New Page 1
பரத்தையிற்
பிரிவு
மெய்யுற வாம்இதுன் னில்லே
வருகெனவெள்கிச்சென்றாள்
கையுறு மான்மறி யோன்புலி
யூரன்ன காரிகையே.
399
25.49 ஊதியமெடுத்துரைத்
தூடறீர்த்தல்
ஊதியமெடுத்துரைத்தூடறீர்த்தல் என்பது
பரத்தையைக் கண்டமைகூறிப் புலந்து வேறுபட்ட தலைமகளுக்கு, இத்தன்மையனாய் யாவர்க்கு மூதியமாகலின்,
அன்பானன்றியருளாற் பரத்தையர்க்குந் தலையளிசெய்ய வேண்டுமன்றே; புறப்பெண்டீரைப் போல யாமவனோடு
புலக்கற்பாலேமல்லேம்; அவன் வரும்பொழுது எதிர்தொழுதும் போம்பொழுது புறந்தொழுதும், புதல்வனைப்
பயந்திருக்கையன்றோ நமக்குக் கடனாவதெனத் தோழி தலைமகன தூதிய மெடுத்துரைத்து அவளையூடறீர்த்து,
அவனோடு பொருந்தப் பண்ணாநிற்றல். அதற்குச் செய்யுள்-
400. காரணி கற்பகங் கற்றவர்
நற்றுணை பாணரொக்கல்
சீரணி சிந்தா மணியணி
தில்லைச் சிவனடிக்குத்
_________________________________________________
ஐயுறவாகவெனத் திரித்துக்கொள்க.
அரத்தகு நெடுவே லென்பது பாடமாயின், அரத்தொழிலாற்றக்க நெடுவேலெனவுரைக்க. மெய்ப்பாடு: நகை.
பயன்: சிவப்பாற்றுதல். ஆற்றாமையே வாயிலாகப் புக்க தலைமகன் தலைமகளைச் சிவப்பாற்றுவிப்பான்
நின்னின் வேறுசிலரெனக் கில்லையால் நீ வெகுளற்க வென்றாற்குத் தலைமகளிவ்வகை
சொன்னாளென்பது.
399
25.49. இரும்பரிசில் ஏற்றவர்க்கருளி
விரும்பினர்மகிழ மேவுதலுரைத்தது.
இதன் பொருள்: ஊரன்
கார் - ஊரன்வேண்டாமைக் கொடுத்தலிற் காரோடொக்கும்; அணி கற்பகம் - வேண்டக் கொடுத்தலின்
அழகிய கற்பகத்தோடொக்கும்; கற்றவர் நல்துணை - நுண்ணிய கல்வியனா கலிற் கற்றவர்க்கு நல்லவுசாத்
துணை; பாணர் ஒக்கல் - இசையுணர்
|