அவரவர
ஆராய்ச்சியுரை
அவரவர் தகுதி, அறிவு, அநுபூதிகளுக்கு
ஏற்பக் காட்சிதரும் பனுவல் உலகில் ஒன்று உண்டு என்றால் அது திப்பிய கிரந்தமாம் திருக்கோவையாரே,
இப்படி இதன் பெருமையை அறிவிக்கும் பழைய பாடல் பின்வருமாறு.
ஆரணங் காணென்ப ரந்தணர் யோகிய
ராகமத்தின்}
காரணங் காணென்பர் காமுகர் காமநன்
னூலதென்பர்
ஏரணங் காணென்ப ரெண்ண ரெழுத்தென்ப
ரின்புலவோர்
சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச்
செப்பிடினே.
-ஆன்றோர்
வாக்கு
சிந்தைத் திருக்கோட்டும் சிவகாமவேதம்
திருக்கோவையார் இத்திருமுறையை முறையாக ஓதி உய்வோமாக.
எண்ணிறைந்த தில்லை யெழிற்கோ
புரந்திகழக்
கண்ணிறைந்து நின்றருளும் கற்பகமே
- நண்ணியசீர்த்
தேனூறு செஞ்சொற் றிருக்கோவை யென்கின்ற
நானூறு மென்மனத்தே நல்கு.61
55.திருச்சிற்றம்பலக்
கோவை, நயநப்ப முதலியார் பதிப்பு, பக்கம்1, (1841) சில வேறுபாடுகளுடன் இப்பாடல் கழகப் பதிப்பில்
அச்சிடப்பட்டிருக்கிறது.
|