21-24: மனம்...................................காண்மதி
(இ-ள்)
மனம் கடந்து ஏறாமதில் வளைத்து-மனந்தானும் கடக்க வொண்ணாத மதிலால் உலகை வளைத்து;
எங்கும் கரு நெருப்பு எடுத்த- எல்லாவிடங்களிலும் கரிய நெருப்பினை வளர்த்துள்ள; மறம்
அருள் மாலை- கொடுமையையே வழங்கா நின்ற மாலைக்காலமே கேள் ; நின் வரற்கு ஏவர்
நல்குநர்-இங்ஙனம் கொடுமைசெய்து நீ வருதற்கு யார்தான் நின்னைப் படைத்துவிட்டனரோ?
அறிகின்றிலேன், அதுகிடக்க ; நின்வரல் கண்டு உடல் இடைநத்ன காட்டுவல் காண் -உன்னுடைய
வருகையைக் கண்டு உடல் வருந்தின பொருள்களை யானே நினக்குக் காட்டுவேன் அவற்றை நீ
பார்ப்பாயாக என்க.
(வி-ம்.)
மதில் என்றது எல்லாப் பக்கங்களிலும் செறிந்துள்ள இருட் செறிவினை, கருநெருப்பு :
இல்பொருள் உவமை இஃது இருளுக்குவமை என்க. இத்தகைய கொடுமை செய்யும் நின்னைப் படைத்து
விடுத்தார் யாவர் கொலோ ! என வியப்பாள் நின் வரற்கு ஏவர் நல்குநர் என்றான்.
வால் - வருகை, இடைதல் -வருந்துதல், மதி, முன்னிலையரை - கருநெருப்பெடுத்த மாலை மற
மருள் மாலை எனத் கண்ணழித்து மறத்தன்மையுடைய மாலையே, எனவும், மயக்கும் மாலையே எனவும்
பொருள் கோடலுமாம், இனி இதனோடு,
ஓங்கா நின்ற
விருளாய் வந்துலகை விழுங்கி மேன்மேலும்
வீங்கா நின்ற கருநெருப்பி னிடையே யெழுந்த வெண்ணெருப்பே |
(இரா. பல, மிதிலை,
76) எனவரும் கம்பர் செய்யுளையு்ம் ஒப்பு நோக்குக நின்னால் தோற்றுவிக்கப்பட்ட
தீமைகளின் விளைவினை நீயே காணும் அறிவுடையையல்லை எனினும் யான் காட்டுவேன் கண்டுணர்க
என்பாள் காட்டுவள் காண்மதி என்றாள்.
25-31:
மண்......................................எனப்பெறின்
(இ-ள்)
மண்உடல் பசந்து கறுத்தது-நின் வருகையால் இந்நிலஉலகம் பசப்படைந்து பின் கறுத்தொழிந்தது
; விண்ணமும் ஆற்றாது அழன்று- வானந்தானும் நின் வரவினால் உண்டான துன்பத்தைப் பொறாதுபுழுங்கி;
காற்றின் முக்ம் மயங்கி - காற்றினால் முகம் வேறுபட்டு ; உடு எனக்கொப்புள் உடல்
நிறை பொடித்து - விண்மீன் என்று சொல்லும்படியான கொப்புளங்கள் தன் உடல் நிரம்ப
உண்டாயிற்று ; ஈங்கு இவற்று அடங்கிய இருதிணை உயிர்களும் ; இங்குக் கூறப்பட்ட இரண்டுலகத்தினும்
அடங்கியிருக்கின்ற உயர்திணையும் அஃறிணையுமாகிய இருவேறுவகை உயிரினங்களும் ; தம்
உடல் - தம்முடைய உடல் ; மயங்கின - மயக்கமெய்தினவு்ம் ; ஒடுங்கின - இளைத்தனவும்;
உறங்கின -அறிவகன்று உறங்கினவும் ; அடங்கின-இருக்குமிடம் தெரியாமல் அடங்கினவும்
; அவிந்தன - இறந்தனவும் ; அயர்ந்தன-
|