பக்கம் எண் :

மூலமும் உரையும்57



நெருப்பு உமிழ் ஆழி ஈந்து அருள் நிமலன்-நெருப்பினை உமிழுகின்ற ஆழிப்படையை வழங்கருளிய நிமலனும் என்க.

     (வி-ம்.) தூணம்-தூண். அம்: சாரியை. தூணமாகிய தாய் கண்படுதல் முதலிய அவத்தைகளின்றியும் பத்துத் திங்கள் சுமவாமலும் நொடியில் பயந்த குழவி என்க: என்றது நரசிங்கத்தின் தோற்றத்தை. பொன்பெயரோன் சினத்தாலே தூணிற்றோன்றிய நரசிங்கமாகிய திருமாலுக்கு என்க. ஆழி-சக்கரம், நிமலன்-அழுக்கற்றவன்.

19-20: கூடல்.......................................தாளோன்

     (இ-ள்) கூடல்மா நகர் ஆட-மதுரைமா நகரத்திலே மாறியாடுதற் பொருட்டு; எடுத்த-தூக்கியருளிய; விரித்த தாமரை குவித்த தாளோன்-மலர்ந்த தாமரையைச் செயற்கையால் குவித்து விட்டாற்போன்ற திருவடியையுடையவனும் ஆகிய இறைவனுடைய என்க.

21-23: பேரள்......................................தெரியாது

     (இ-ள்) பேரருள் விளை அச்சீர் இலர்போல-மிகுந்த அருளினை உண்டாக்கும் அச்சிறப்பினைப் பெறார் போலவும்; துலங்கிய அமுதம்-தெளிந்த நீர்; கலங்கியது என்ன-கலங்கினாற் போலவும்; இதழ் குவித்து-என்றோழிதன் இதழ்கலைக் குவித்து; பணித்த குதலையுந் தெரியாது-மொழிந்தருளிய மழலை மொழிகளுக்கும் பொருள் விளங்காது; என்க.

     (வி-ம்.) இறைவனுடைய அருள் விளைதற்குக் காரணமான அச்சிறப்பினை உடையார் அல்லாதார்க்கு மெய்ப்பொருள் விளங்காதது போலவும் கலங்கிய நீரில் உட்பொருள் விளங்காதது போலவும் எம்பெருமாட்டியின் குதலையும் பொருள் விளங்காது என்றவாறு. அருள் விளைதற்குரிய சீர் என்றது மலபரிபாகத்தை. பணித்த-மொழிந்த. குதலை-பொருள் விளக்கமற்ற எழுத்துருவம் பெறாத மலைமொழி.

24: முருந்து..................................தோன்றாது

     (இ-ள்) திருந்து முருந்து நிரைத்த-திருந்திய முருந்தினை நிரல்பட வைத்தாற் போன்ற; பல்தோன்றாது-பல்லின்கண் காமக்குறிப்புடைய நகை தோன்றாது என்க.

     (வி-ம்.) முருந்து-மயில் இறகின் அடி. இது பல்லுக்குவமை. நிரைத்தல்-நிரல்பட வைத்தல். பல்லின்கண் நகை தோன்றாது என்க. நகை-காமக்குறிப்புடைய புன்முறுவல். இதனை,