நெருப்பு உமிழ் ஆழி
ஈந்து அருள் நிமலன்-நெருப்பினை உமிழுகின்ற ஆழிப்படையை வழங்கருளிய நிமலனும் என்க.
(வி-ம்.) தூணம்-தூண்.
அம்: சாரியை. தூணமாகிய தாய் கண்படுதல் முதலிய அவத்தைகளின்றியும் பத்துத் திங்கள்
சுமவாமலும் நொடியில் பயந்த குழவி என்க: என்றது நரசிங்கத்தின் தோற்றத்தை. பொன்பெயரோன்
சினத்தாலே தூணிற்றோன்றிய நரசிங்கமாகிய திருமாலுக்கு என்க. ஆழி-சக்கரம், நிமலன்-அழுக்கற்றவன்.
19-20:
கூடல்.......................................தாளோன்
(இ-ள்) கூடல்மா நகர்
ஆட-மதுரைமா நகரத்திலே மாறியாடுதற் பொருட்டு; எடுத்த-தூக்கியருளிய; விரித்த தாமரை
குவித்த தாளோன்-மலர்ந்த தாமரையைச் செயற்கையால் குவித்து விட்டாற்போன்ற திருவடியையுடையவனும்
ஆகிய இறைவனுடைய என்க.
21-23:
பேரள்......................................தெரியாது
(இ-ள்) பேரருள் விளை
அச்சீர் இலர்போல-மிகுந்த அருளினை உண்டாக்கும் அச்சிறப்பினைப் பெறார் போலவும்;
துலங்கிய அமுதம்-தெளிந்த நீர்; கலங்கியது என்ன-கலங்கினாற் போலவும்; இதழ் குவித்து-என்றோழிதன்
இதழ்கலைக் குவித்து; பணித்த குதலையுந் தெரியாது-மொழிந்தருளிய மழலை மொழிகளுக்கும்
பொருள் விளங்காது; என்க.
(வி-ம்.) இறைவனுடைய
அருள் விளைதற்குக் காரணமான அச்சிறப்பினை உடையார் அல்லாதார்க்கு மெய்ப்பொருள்
விளங்காதது போலவும் கலங்கிய நீரில் உட்பொருள் விளங்காதது போலவும் எம்பெருமாட்டியின்
குதலையும் பொருள் விளங்காது என்றவாறு. அருள் விளைதற்குரிய சீர் என்றது மலபரிபாகத்தை.
பணித்த-மொழிந்த. குதலை-பொருள் விளக்கமற்ற எழுத்துருவம் பெறாத மலைமொழி.
24:
முருந்து..................................தோன்றாது
(இ-ள்) திருந்து முருந்து
நிரைத்த-திருந்திய முருந்தினை நிரல்பட வைத்தாற் போன்ற; பல்தோன்றாது-பல்லின்கண்
காமக்குறிப்புடைய நகை தோன்றாது என்க.
(வி-ம்.) முருந்து-மயில்
இறகின் அடி. இது பல்லுக்குவமை. நிரைத்தல்-நிரல்பட வைத்தல். பல்லின்கண் நகை தோன்றாது
என்க. நகை-காமக்குறிப்புடைய புன்முறுவல். இதனை,
|