யானோக்குங்
காலை நிலனோக்கும் நோக்காக்காற்
றானோக்கி மெல்ல வரும்
|
(குறள்-1094) |
எனவும்,
குறிக்கொண்டு
நோக்காமை யல்லா லொருகண்
சிறக்கணித்தாள் போல நகும்
|
(குறள்-1095) |
எனவும் வரும் திருக்குறள்களானும்
உணர்க.
25-26:
தெய்வம்........................கூடாது
(இ-ள்) தெய்வம்
கொள்ளார் திணிமனம் என்ன-கடவுள் உண்டென்று நினையாத மடவோருடைய இருள் செறிந்த
நெஞ்சம் ஒருவழிப்படாதது போல; விரிதரு கூழையும் திருமுடி கூடாது-பரந்த கூந்தலும் அழகிய
முடியிடத்தே பொருந்த மாட்டாது என்க.
(வி-ம்.) தெய்வம்
உண்டு என்று கொள்ளார் என்க. இருள் திணிந்த மனம் என்க. இருள்-அறியாமை. திணிமனம்:
வினைத்தொகை. விரிதரு கூழையும் அது. கூழை-கூந்தல். பேதைப் பருவத்து மகளிர்க்குக் கூந்தல்
முடியின்கண் அடங்குமளவு வளராமையின் கூழையும் திருமுடி கூடாது என்றாள். மடங்காக் கூழையும்
மருங்குதலும் பற்றிப் புதையிருந்தன்ன கிளரொளி வனப்பினர் (பெருங். 1. 34, 132-3)
எனப் பிறரும் ஓதுதல் காண்க.
27-28:
துணைமீன்............................................கொள்ளாது
(இ-ள்) துணைமீன்-காதற்றுணையாகிய
இரட்டை மீன்கள்; காட்சியின் விளைகரு என்ன-தம்முடைய பார்வையாலேயே விளைக்கின்ற
சினையைப் போல; கூர்விழி-எம்பெருமாட்டியின் கூரிய கண்கள்; பார்வையின் தொழில்கள்
கொள்ளாது-தமது நோக்கத்தாலேயே பிறர் உள்ளத்தே காமக்குறிப்பினைத் தோற்றுவித்தல்
முதலிய தொழில்களைச் செய்யமாட்டா என்க.
(வி-ம்.) துணைமீன்-ஆணும்
பெண்ணுமாகிய இரட்டை மீன்கள். கண்கள் இரண்டாகலின் துணைமீன் என்றார். மீன்கள்
தம் சினையைத் தம் விழ்களால் கூர்ந்து நோக்கும் அளவிலே அச்சினை குஞ்சுகளாய் விடும்.
அதுபோலத் தலைவியின் கண்கள் தம்பார்வையால் காதலன் நெஞ்சில் காமவியக்கத்தை
தோற்றுவிக்க மாட்டா என்றவாறு.
29-30:
மறுபுலத்து.......................................அன்றே
(இ-ள்) வேந்து மறுபுலத்து
அடுபகை அடக்கியது என-ஒரு வேந்தன் தன் பகைப்புலத்தார் விளைக்கும் பகையைக் காலம்பார்த்து
உள் அடக்கினாற்போல; வடுத்து எழுகொலை
|