|
|
முருகக் கடவுள் வாழ்த்து
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
பாய்திரை
யுடுத்த ஞாலமுடி வென்ன
முடங்குளை முகத்துப் பஃறோ ளவுணனொடு
மிடையுடு வுதிரச் செங்களம் பொருது
ஞாட்பினுண் மறைந்து நடுவுறு வரத்தால்
வடவைநெடு நாக்கின் கிளைகள்விரிந் தென்னச் |
10
|
|
செந்துகிர்
படருந் திரைகடற் புக்குக்
கிடந்தெரி வடவையிற் றளிர்முக மீன்று
திரையெறி மலைகளிற் கவடுபல போக்கிக்
கற்செறி பாசியிற் சினைக்குழை பொதுளி
அகறிரைப் பரப்பிற் சடையசைந் தலையாது |
15
|
|
கீழிணர்
நின்ற மேற்பகை மாவின்
ஓருட லிரண்டு கூறுபட விடுத்த
அழியாப் பேரளி யுமைக்க ணின்று
தற்பெயர் புணர்த்திக் கற்பினொடு கொடுத்த
அமையா வென்றி யரத்தநெடு வேலோய் |
20
|
|
கீழ்மே
னின்றவக் கொடுந்தொழிற் கொக்கின்
கூறிரண் டாய வொருபங் கெழுந்து
மாயாப் பெருவரத் தொருமயி லாகிப்
புடவிவைத் தாற்றிய பஃறலைப் பாந்தள்
மண்சிறுக விரித்த மணிப்படந் தூக்கி |
25
|
|
விழுங்கிய
பல்கதிர் வாய்தொறு முமிழ்ந்தென
மணிநிரை சிந்தி மண்புக வலைப்பக்
கார்விரித் தோங்கிய மலைத்தலைக் கதிரென
ஓவறப் போகிய சிறைவிரி முதுகிற்
புவனங் காணப் புகழொடு பொலிந்தோய் |
|
|
போழ்படக்
கிடந்த வொருபங் கெழுந்து
மின்னன் மாண்ட கவிரலர் பூத்த |