| | அந்நிலை யன்றி அழிவறி முத்தி ஏயா தென்றுதன் இயல்பை மாயா வாதி வகுத்துரைத் தனனே. | 4. மாயாவாதி நிராகரணம் | 5 | உரைதரு பிரமம் ஒன்றெனும் உரைக்கண் வருபிர மாணம் மறையெனில் அருமறை ஒன்றென்ற தன்றி இருபொருள் உரைத்தல் நன்றன் றபேதம் நாடிய பொருளேற் பேதமும் அபேதமும் ஓத வேண்டா | மற்றுண்டாகிய கன்மங்க ளெல்லாவற்றையும் அழித்துப் போடாநிற்கும்; அந்நிலையன்றி - அந்த நிலையிலே நின்றுவிடக் கடவன்; அது ஒழிந்து; அழிவறு முத்தி ஏயாதென்று தன் இயல்பை மாயாவாதி வகுத்து உரைத் தனனே - நிலைபெற்றுடைய தாயிருக்கிற முத்திப்பேறு பொருந்தாது. இப்படியே தன்னுடைய பெத்தத்திலும் முத்தியிலு முண்டாகிய முறைமை யினை மாயாவாதியானவன் வித்தரித்துச் சொன்னான். மேல் ஐக்கியவாதி மறுக்கிறான்: 3 (உரை) உரைதரு பிரமம் ஒன்றெனும் உரைக்கண் வரு பிரமாணம் மறையெனில் - நீ பெத்தமாகவும் முத்தியாகவும் கூறின உன்னுடைய மதத்தின் தாற்பரியம் பிரமமொன்றுமே யுள்ளதென்று சொல்லுமிடத்து ஒன்றென்றதற்குப் பிரமாணம் ஏதென்னில், வேதமே பிரமாணமாயிருக்கு மென்னில்; அருமறை ஒன்றென்ற தன்றி இருபொருள் உரைத்தல் நன்றன்று - அரிய வேதமானது பிரமமொன்றுமே யுள்ளதென்று சொல்லுவதன்றிச் சீவபரமென்று இரண்டாகச் சொல்லச்செய்தே நீ இட்ட பிரமாணத்துக்கு நன்றாகாது; அபேதம்நாடிய பொருளேல் - வேதம் அப்படிஇரண்டென்றதும் அபேத சித்தாந்தத்தைச் சொன்னதாயிருக்குமென்னில்; பேதமும் அபேதமும் ஓதவேண்டா - நீ ஒன்றென்றதற் கிட்டபிரமாணம் இரண்டென்றும் இரண்டல்லவென்றுஞ் சொல்ல வேண்டுவதில்லை; பேதமென்றும் அபேதமென்றும் பேதாபேத மென்றும் வேதஞ்சொல்கிற தெல்லாம் அந்தப் பிரமமொன்றையுமே யென்னில்; பேதமெனினும் |