| 10 | பேத மெனினும் அபேத மெனினும் பேதா பேத மெனினும் அமையும்நின் ஐயமில் உரையிற் பையவந் துள தாம் திகழ்பிர மாண இகழ்வுமுண் 1டன்றிப் பெத்தம் பேத முத்தி அபேதமேல் | | 15 | அநவத் திதமாம் அவை இரு திறனும் இனி அப் பழமொழி இரண்டல ஒன்றேல் அன்றியும் பெத்தம் பேதத் தறைதலும் ஒன்றிய முத்தி அபேதத் துரைத்தலும் பழுதாம் இத்திறன் பதையா தாய்கமற்(று) | அபேதமெனினும் பேதாபேதமெனினும் அமையும் நின் ஐயமில் உரையிற் பையவந் துளதாம் திகழ்பிரமாண இகழ்வும் - வேதம் இரண்டென்றாலும் இரண்டல்லவென்றாலும் இரண்டுமாய் இரண்டல்லவு மாயிருக்குமென்றாலும் அமைவு பிரிந்திருப்பதா யிருக்கிற உன்னுடைய சந்தேகமற்றிருக்கிற சாத்திரத்திலே விசாரித்துப் பார்க்குமிடத்துக் கிரமத்திலே விளங்கப்பட்ட பிரமாண விரோதமும் உண்டாகாநிற்கும்; உண்டன்றிப் பெத்தம் பேதம் முத்தி அபேதமேல்- அப்படிப் பிரமாண விரோதம் உண்டாகாது காணும், அந்த வேதம் பெத்தத்திற் பேதமென்றும் முத்தியில் அபேதமென்றுஞ் சொல்லு மென்னில்; அநவத்திதமாம் அவை இருதிறனும் - சாத்திரம் பெத்தத்திற் பேதமென்றும் முத்தியில் அபேதமென்றுஞ் சொன்ன இரண்டுவகையையும் விசாரித்துப் பார்க்குமிடத்து உன்னுடைய சாத்திரம் அறுதியில்லாததாம். ஆகையால் சாத்திர விரோத முண்டென்கிறது தப்பாது; இனி அப் பழமொழி இரண்டல ஒன்றேல்-நான் அநவத்திதமா யிருக்கு மென்றதுகொண்டு நீ இப்பொழுது அந்தப் பழைய மொழியாகிய வேதம் இரண்டென்று சொல்லாது ஒன்றென்றே சொல்லுமென்னில்; அன்றியும் பெத்தம்பேதத் தறைதலும் ஒன்றிய முத்தி அபேதத் துரைத்தலும் பழுதாம் இத்திறன் பறையாது ஆய்க - முன்னே இரண்டென்று சாத்திரஞ் சொல்லி இப்பொழுது ஒன்றென்று சொன்ன தோஷமன்றியும் பெத்த தசையிற் சீவபர மென்று இரண்டாயிருக்கு மென்றதும் முத்தி தசையிற் சீவபரமிரண்டும் ஒன்றாயிருக்குமென்றதுங் குற்றத்தை யுடைத்தாயிருக்கும்.
1. டன்றப், டானற் - பாடபேதம். |