| 65 | பரத்தில தேல்ஒழி முன்பகர் மாற்றம் அதன்முதல் இதுவென உதவுக அன்றியும் | | 70 | விவகரிக் குங்கால் திகழ்பர மார்த்த நிலைஅது தெரியின் இதுநீ நீயேல் தெரியா தாயின் அஃதுந் தெரியாது உரையார் அளவையும் ஒழிந்தனை அன்றே அளவை காண்டல் கருதல் உரையென | பரத்திலதேல் - உலகம் பொய்யாயிருந்தபடியாலே இது அந்தப் பரமார்த் தத்துக்குப் பணியல்லவென்னில்; ஒழி முன்பகர்மாற்றம் - உலகம் பிரமத்திலே நின்றுந் தோன்றிற்றென்று நீ முன்னே சொன்ன வார்த்தையை ஒழிந்து விடுவாயாக; அதன்முதல் இதுவென உதவுக - இந்த உலகம் பிரமத்திலே தோன்றின தல்லவாயின் அது தோன்றின உபாதானம் உனக்குத் தெரியுமாயின் இன்னதென்று சொல்லுவாயாக; அன்றியும் விவகரிக்குங்கால் திகழ் பரமார்த்த நிலை அது - இந்தத் தோல்வியன்றியும் இன்னமுஞ் சொல்லுமிடத்து, நின்மலமாய் எல்லா உபாதிகளையுந் கழன்ற பரமார்த்த நிலையாயிருப்ப தொன்று அந்தப் பிரமம்; தெரியில் இது நீ - விசாரித்துப் பார்க்குமிடத்து மலமாயிருக்கிற இந்த மாயாவுபாதிகளோடுஞ் சம்பந்தியாயிருப்பா னொருத்தன் நீ, ஆகையால் இந்தச் சீவனுந் தனியே ஒரு முதலென்; நீயேல் - அந்தப் பிரமந்தான்காணும் நானென்னில் அது அறிவாயிருக்கிறது, இது அறியாம லிருப்பானேன்; தெரியாது - இது உபாதிகள் வசத்தினாலே தெரியா மலிருக்கும்; ஆயின் அஃதுந் தெரியாது - நீயும் அந்தப் பிரமமும் ஒரு முதலாயிருக்கச்செய்தே இது உபாதிவசத்தினாலே அறியாதிருக்குமாயின்; அந்தப்பிரமமும் அறியாததாகவேண்டும்; உரையார் அளவையும் ஒழிந்தனை யன்றே - உன்னுடைய அர்த்தத்தை அளவிட்டுச் சொல்லிவருகிற பிரமாணத்தையும் விட்டுவிட்டாய். அதென்னெனில் அது ஒன்றைச்சொல்ல நீ ஒன்றைச் சொல்லுகையால். அந்தச் சாத்திரத்தின்படியே காணும் நான் சொன்னதுமென்னில்; அளவை காண்டல் கருதல் உரையென உளது - பிரமாணமாவது பிரத்தியக்ஷ மென்றும் அனுமானமென்றும் ஆகமமென்றும் மூன்று வகைப்படும்; அவை மூன்றின் மொழிவழி நுழையின் நின் பிரமேயமென்பது |