| | பாரிடை ஒருபடம் பண்ணவும் படுமே அந்தமில் பிரமம் அவித்தைகா ரணமெனத் தந்தனை அவித்தை தானெய் துறுதல் | | 90 | தன்னியல் பென்னில் வன்னிதன் வெம்மையிற் சத்தின தியல்புஞ் சத்தே அசத்தெனில் வைத்ததன் இயல்பெனும் வழக்கொழி அன்றியும் இருள்பொதி விளக்கென வரும்இரு விளக்கிற் கருமை பயந்த பெருகொளி தகுமெனில் | பாரிடை ஒரு படம் பண்ணவும் படுமே - பருத்தி காரணமாகப் புடைவை யுண்டாவ தொழிந்து மண் காரணமாகப் புடைவை பண்ணவும் வேண்டும், ஆகையாற் சடங்காரணமாகச் சடமுண்டாவ தொழிந்து சித்துக் காரணமாகச் சடமுண்டாகாது. இப்படி யிருக்கச்செய்தே நீ ; அந்தமில் பிரமம் அவித்தை காரணமெனத் தந்தனை - சடமாய் அழிந்துபோவதா யிருக்கிற தேகாதிப் பிரபஞ்சத்துக்குச் சித்தாய் அழிவில்லாம லிருப்பதாகிய பிரமம் காரணமென்று நீ சொன்னாய்; அவித்தை தானெய்துறுதல் சித்தாயுள்ள பிரமத்திலே சடமாயுள்ள பிரபஞ்சம் தோன்றவேண்டுவானேன்; தன் இயல்பு என்னில் - இந்தப் பிரபஞ்சம் உண்டாகிறது அந்தப் பிரமத்துக்கு இயல்பா யிருப்ப தொன்றென்று நீ சொல்லில்; வன்னிதன் வெம்மையிற் சத்தின தியல்புஞ் சத்தே - அக்கினிக்கு உட்டணம் இயல்பானாற்போல நீ சித்துக்கு இயல் பென்று சொன்னபிரபஞ்சமுஞ் சித்தேயாகவேண்டும்; அசத்தெனில் - பிரபஞ்சத்தைச் சடமென்னில்; வைத்த தன் இயல்பெனும் வழக்கு ஒழி சத்தாக வைக்கப்பட்ட பிரமத்தினுடைய இயல்பு இந்தப் பிரபஞ்சமென்று சொன்ன வழக்கை விடுவாயாக; அன்றியும் இருள்பொதிவிளக்கென வரும் - இந்தக் குற்றமன்றியுஞ் சித்தாயுள்ள பிரமத்துக்குச் சடமாயுள்ள பிரபஞ்சம் இயல்பென்று நீ சொல்லுகிறது பிரகாசமாயுள்ள விளக்கு இருளானதைப் பொதிந்துகொண்டு நின்ற தென்றதை யொக்கும். அப்படியன்று காணும்; இரு விளக்கிற் கருமை பயந்த பெருகொளி தகுமெனில் - பெரிய விளக்கினிடத் துண்டாகிய மிக்க பிரகாசமானது கறுத்த மையைத் தந்த தன்மையை யொக்கும், சித்தாயுள்ள பிரமம் சடமாயுள்ள பிரபஞ்சத்தைத் |